Tag: உச்ச நீதிமன்றம்

காவிரி மேலாண்மை வாரியம் என வரைவுத் திட்டத்தில் பெயரைக் குறிப்பிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

இதன்படி, காவிரி நதிநீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும். மேலும், காவிரியில் புதிதாக அணைகள் கட்ட இயலாது. மேலாண்மை வாரியத்தின் அனுமதி பெறாமல் கர்நாடகமோ தமிழகமோ அணைகள், தடுப்பணைகள் கட்டக் கூடாது. இதற்கான அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கே இருக்கும்.

டாஸ்மாக் கடைகள் மூடல் விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

புது தில்லி: தமிழகத்தில் 1,300 டாஸ்மாக் கடைகளை மூடக்கூறிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவை உறுதி செய்தது.தமிழகத்தில் நகர எல்லையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சிச்...

33வது வழக்காக காவிரி வழக்கு: உச்ச நீதிமன்ற இன்றைய பட்டியலில்!

புது தில்லி: காவிரி வழக்கு முதல் வழக்காக காலை 10.30க்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் 33-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இன்று காலை உச்சநீதிமன்ற வழக்குகள் பட்டியலில் அறிவிப்பு இருந்தது.காவிரி வழக்கு...

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம்?: விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

புது தில்லி:  ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அதனை விரிவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

காவிரி வழக்கு: கர்நாடக தேர்தல் முடிந்த 2வது நாளுக்கு விசாரணை ஒத்தி வைப்பு!

கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை, எனவே தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடகம் தொடர்ந்த வழக்கிலும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் தாக்கல் செய்த பதில் மனு மீதும் உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாததால் தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தலைமை நீதிபதியை நீக்கக் கோரிய காங்கிரஸ் மனு தள்ளுபடி

புது தில்லி: தலைமை நீதிபதியை நீக்கக்கோரிய காங்கிரஸ் எம்.பி.க்கள் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ் வழக்கறிஞர் கபில் சிபில் மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
- 2026

காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் விசாரணை தள்ளிவைப்பு

கர்நாடக அணைகளில் 19.834 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதாகவும், எனவே 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கும் நிலை இருப்பதாகவும் அதில் குரிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீரை திறக்க மறுத்து கர்நாடக அரசும், தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக அரசும் வாதத்தை முன்வைத்துள்ளது.

கதுவா சிறுமி பலாத்கார வழக்கு; பதான்கோட்டுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம்

கதுவா சிறுமி மானபங்கப் படுத்தப் பட்டு கொலை செய்யப் பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவுக்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்து, வழக்கை பதான்கோட் நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. 

எஸ்சி., எஸ்டி., வன்கொடுமை தடுப்புச் சட்ட உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உறுதி

எஸ்சி., எஸ்டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தாங்கள் அண்மையில் பிறப்பித்த உத்தரவுக்கு, திருத்தம் செய்யவோ தடை விதிக்கவே முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு நபரையும் விசாரணையின்றி உடனடியாகக் கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காவிரியை தேர்தல் அரசியல் ஆக்கிய கர்நாடக காங்கிரஸுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

காவிரி குறித்த வழக்கு மே.3 ஆம் தேதி இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்திற்கு மே மாதத்திற்குள் 4 டி.எம்.சி., தண்ணீரை காவிரியில் திறந்துவிட வேண்டும். உத்தரவை மீறினால் மாநில அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது.

காவிரி விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் மரத்தில் ஏறிப் போராட்டம்

முன்னதாக, காவிரி விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு என்ன செய்தது என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் வேண்டும் என்றும், கர்நாடகாவில் தேர்தல் என்பதையெல்லாம் நாங்கள் ஏற்க முடியாது என்றும், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க மாட்டோம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

காவிரி வழக்கில் தாமதத்துக்கு பிரதமர் மோடியைக் காரணம் காட்டிய மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்!

பிரதமர், மத்திய அமைச்சர்கள் கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் காவிரி பங்கீட்டிற்கான வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் கோரினார்.
- 2026

Recent articles

spot_img