கர்நாடக தற்காலிக அவைத்தலைவர் நியமனம் செல்லும்: உச்ச நீதிமன்றம்

supreme court of india - 2026

பெங்களூர்: கர்நாடகாவில் தற்காலிக அவைத்தலைவராக போப்பையா நியமிக்கப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பவும் ஆணை பிறப்பித்துள்ளது.

கர்நாடக சட்டசபையின் தற்காலிக அவைத் தலைவராக பா.ஜ.க, எம்எல்ஏ., போப்பையா நியமிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காங்கிரஸ் சார்பில் வாதாடிய அபிஷேக் மனு சிங்வி, போப்பையாவுக்கு அனுபவம் கிடையாது. அவர் அவைத்தலைவராக இருந்தால் ஓட்டெடுப்பு சரியாக நடக்காது. இதற்கு முன் அவைத்தலைவராக இருந்து அவர் எடுத்த முடிவுகள் சர்ச்சையாகி உள்ளன என்று கூறினார்.

இதற்கு பதில்கேள்வி கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அப்படியானால் நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்தி வைக்கலாமா என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, போப்பையாவை தற்காலிக அவைத்தலைவர் பதவியில் இருந்து நீக்க உத்தரவிடுமாறு கோரிய விடுத்த காங்கிரஸின் கோரிக்கையை நிராகரித்தனர்.

மேலும் போப்பையாவை நீக்க உத்தரவிட முடியாது என்றும், போப்பையா தான் அவைத்தலைவராக இருந்து வாக்கெடுப்பை நடத்துவார். குறிப்பிட்ட நபரை அவைத் தலைவராக நியமிக்க பரிந்துரை செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்குக் கிடையாது என்றும் கூறினர்.

அடுத்து, நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை ஊடகங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யலாம் என்றும் வாக்கெடுப்பை வீடியோ பதிவும் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

மக்களிடம் நம்பிக்கை இழந்து, கர்நாடக ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப் பட்ட காங்கிரஸால், தங்களுக்கு ஏற்பட்ட நிலையை ஜீரணிக்க இயலாமல், அனைத்து வழிகளையும் கையாண்டு, பாஜக.,வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு ஏற்பாடு செய்துவருகிறது. இது கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், மஜத., காங்கிரஸ் மீது வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories