ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம்?: விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

sridevi 3 - 2026


நடிகை ஸ்ரீதேவி மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த கோரிய மனு தள்ளுபடி. #Actress_SriDevi #DeathCase #Investigation #petition #Rejected


புது தில்லி:  ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அதனை விரிவாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குடும்ப திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக துபை சென்ற நடிகை ஸ்ரீதேவி, அங்குள்ள ஹோட்டல் குளியலறையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து விசாரணை செய்த துபை போலீஸார், அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை என்றும், திடீர் மாரடைப்பு என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி, சுனில் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, துபை போலீஸார் நடத்திய விசாரணையில் சந்தேகப் படும் அம்சங்கள் எதுவும் இல்லை என்று கூறியதை சுட்டிக் காட்டி, எனவே இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img