முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா; தடை தகர்த்த உச்ச நீதிமன்றம்!

yediyurappa amitsha - 2026

பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா இன்று பதவி ஏற்கிறார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ், மஜத உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், எடியூரப்பாவுக்கு தடை இல்லை என பச்சைக் கொடி காட்டியது உச்ச நீதிமன்றம்.

காங்கிரஸ், மஜத., இரண்டும் சேர்ந்து தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டது. அதை அடுத்து இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்கப்பட்டு நள்ளிரவு 1.45க்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போப்தே ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் போது, காங்கிரஸ்-மஜத தரப்பு வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் மனு சிங்வி, எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். மேலும், தாங்கள் கர்நாடக ஆளுநரை எதிர்க்கவில்லை; எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த அவரின் முடிவையே எதிர்க்கிறோம் என்றார்.

இதற்கு பதிலாக, அரசுத் தரப்பு வழக்குரைஞர் முகுல் ரோத்தஹி, ஆளுநரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; மரபுப் படி ஆளுநர் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியை ஆட்சியமைக்க அழைத்துள்ளார் என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்க தடையில்லை என்றும், இந்த வழக்கு குறித்து விரிவான விசரணைக்குப் பிறகு தான் முடிவு எடுக்க முடியும் என்றும் கூறினர்.

மேலும், எடியூரப்பா தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை மதியம் 2 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எடியூரப்பாவின் பதவியேற்பு இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் கூறினர். இந்த வழக்கின் விசாரணை நாளை காலை 10.30க்கு நடைபெறும் என்று கூறினர்.

இதையடுத்து எடியூரப்பா இன்று காலை 9 மணிக்கு முதல்வராகப் பதவி ஏற்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories