December 5, 2025, 8:44 PM
26.7 C
Chennai

33வது வழக்காக காவிரி வழக்கு: உச்ச நீதிமன்ற இன்றைய பட்டியலில்!

supreme court of india - 2025

புது தில்லி: காவிரி வழக்கு முதல் வழக்காக காலை 10.30க்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும் 33-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இன்று காலை உச்சநீதிமன்ற வழக்குகள் பட்டியலில் அறிவிப்பு இருந்தது.

காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கோரியிருந்த செயல்திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அறிவித்த மாற்றங்களுடன் அமல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதை அடுத்து, வரைவு செயல்திட்ட அறிக்கையை அளிப்பதற்கு முதலில் மத்திய அரசுக்கு 6 வார கால அவகாசம்  வழங்கப்பட்டது.

ஆனால் பின்னர் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று அவகாசம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் மே 3ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில், செயல் திட்ட வரைவு தயார் செய்யப்பட்டு விட்டதாகவும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இனி கூடுதல் அவகாசம் ஏதும் வழங்கப்படாது என்ற நிபந்தனையுடன் மே 14ஆம் தேதி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், காவிரி தொடர்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று வரை நடைபெறவில்லை. ஆனால், இதற்கு அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதாலும், மத்திய நீர்வளத் துறை அமைச்சரும் இந்த வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அவசியமற்றது என்றும் கூறியிருப்பதால், வரைவுத்திட்ட அறிக்கை நேரடியாக இன்று உச்ச நீதிமன்றத்தில் வழங்கப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் காரணத்தாலேயே காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தாமதம் செய்தது என்று தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.  இந்நிலையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலும் நிறைவடைந்து விட்டதால், அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இனி கால தாமதம் செய்ய  எந்தக் காரணங்களும் இல்லை என்பதால் மத்திய அரசு இதற்கான திட்ட வரைவினை உச்ச நீதிமன்றத்தில் வழங்கும் என்று தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories