கதுவா சிறுமி பலாத்கார வழக்கு; பதான்கோட்டுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம்

facts kashmir - 2026

கதுவா சிறுமி மானபங்கப் படுத்தப் பட்டு கொலை செய்யப் பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவுக்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்து, வழக்கை பதான்கோட் நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கு,உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஆலோசித்து வந்தது.

kathuva - 2026

இந்நிலையில் இன்று காஷ்மீர் அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. அதில், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற காஷ்மீர் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. காஷ்மீரிலேயே வழக்கை நேர்மையாக விசாரிப்பதாகவும் உறுதி அளித்தது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கத்துவா சிறுமி பலாத்கார வழக்கை பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை பதான்கோட்டுக்கு மாற்றிய சிறிது நேரத்திலேயே அது குறித்து தெரிவித்த பதன்கோட் நீதிமன்றம், கத்துவா வழக்கு விசாரணை நாள்தோறும் நடத்தப்படும் என்றும் வழக்கின் விசாரணை வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் கூறியது,. மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை மாதம் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து பிறப்பித்துள்ள உத்தரவில், இவ்வழக்கில் பதான்கோட் நீதிமன்றத்தில் காஷ்மீர் அரசு தனது தரப்பு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாம் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், வழக்கறிஞர், சாட்சிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று காஷ்மீர் அரசு கேட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

katua vishal in atm - 2026

முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பல தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. குறிப்பாக, இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக காஷ்மீரில் பெரும் போராட்டங்கள் நடைபெற்ற்றன. இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், பொய்யான தகவலை காஷ்மீர் போலீஸார் அரசியல் காரணங்களுக்காக முன்வைத்து மக்களை மத ரீதியாக பிளவு படுத்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இதை அடுத்து சிபிஐ விசாரணை தேவை என பல்வேறு தளங்களிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின்விசாரணை காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியே பஞ்சாபின் பதான்கோட்டில் நடைபெறும் என்று கூறியது. இது தொடர்பான எச்சரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories