கதுவா சிறுமி பலாத்கார வழக்கு; பதான்கோட்டுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம்

facts kashmir - 2026

கதுவா சிறுமி மானபங்கப் படுத்தப் பட்டு கொலை செய்யப் பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவுக்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்து, வழக்கை பதான்கோட் நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கு,உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் ஆலோசித்து வந்தது.

kathuva - 2026

இந்நிலையில் இன்று காஷ்மீர் அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப் பட்டது. அதில், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற காஷ்மீர் அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. காஷ்மீரிலேயே வழக்கை நேர்மையாக விசாரிப்பதாகவும் உறுதி அளித்தது.

ஆனால் இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கத்துவா சிறுமி பலாத்கார வழக்கை பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை பதான்கோட்டுக்கு மாற்றிய சிறிது நேரத்திலேயே அது குறித்து தெரிவித்த பதன்கோட் நீதிமன்றம், கத்துவா வழக்கு விசாரணை நாள்தோறும் நடத்தப்படும் என்றும் வழக்கின் விசாரணை வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் கூறியது,. மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை மாதம் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு குறித்து பிறப்பித்துள்ள உத்தரவில், இவ்வழக்கில் பதான்கோட் நீதிமன்றத்தில் காஷ்மீர் அரசு தனது தரப்பு வழக்கறிஞரை நியமித்துக் கொள்ளலாம் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர், வழக்கறிஞர், சாட்சிகள் ஆகியோருக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று காஷ்மீர் அரசு கேட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

katua vishal in atm - 2026

முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று பல தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப் பட்டன. குறிப்பாக, இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஆதரவாக காஷ்மீரில் பெரும் போராட்டங்கள் நடைபெற்ற்றன. இந்த வழக்கு ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், பொய்யான தகவலை காஷ்மீர் போலீஸார் அரசியல் காரணங்களுக்காக முன்வைத்து மக்களை மத ரீதியாக பிளவு படுத்தியுள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

இதை அடுத்து சிபிஐ விசாரணை தேவை என பல்வேறு தளங்களிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அவற்றை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின்விசாரணை காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியே பஞ்சாபின் பதான்கோட்டில் நடைபெறும் என்று கூறியது. இது தொடர்பான எச்சரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories