காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் விசாரணை தள்ளிவைப்பு

supreme court of india - 2026

புது தில்லி: காவிரி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மணி நேரம் தள்ளிவைக்கப் பட்டது.  தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் வேறு ஒரு வழக்கின் விசாரணையில் உள்ளார் எனபதால் இந்த ஏற்பாடு செய்யப் பட்டது.

காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காவிரி வரைவு திட்டம் பற்றி அறிவிப்பு வெளியாகுமா என தமிழக விவசாயிகள் எதிர் பார்துள்ளனர்.

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாதென கர்நாடகம் மறுத்துள்ள நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை கடந்த 3ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மே மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டுமென கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும், காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாள்கள் அவகாசம் கோரிய மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்ததோடு, மே 8-ஆம் தேதி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, கர்நாடகாவில் குறைவான தண்ணீரே இருப்பதாகவும், ஏற்கனவே தமிழகத்துக்கு ஏப்ரல் மாதம் வரை 116 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதாக கூறியுள்ள அம்மாநில அரசு, தண்ணீரை திறக்க மறுத்தது. இதுகுறித்து மனுவை அம்மாநில அரசு நேற்று பிரமாண பத்திரமாக தாக்கல் செய்தது.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், இதுவரை 1.4 டிஎம்சி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டிருப்பதாகவும், மே மாதம் வரை 2.5 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் 19.834 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருப்பதாகவும், எனவே 4 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்கும் நிலை இருப்பதாகவும் அதில் குரிப்பிடப் பட்டுள்ளது. தண்ணீரை திறக்க மறுத்து கர்நாடக அரசும், தண்ணீர் திறக்க வலியுறுத்தி தமிழக அரசும் வாதத்தை முன்வைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories