பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப் படுத்தாவிட்டால், அது எங்களின் போர் ஆகி விடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் சட்டமன்றத்தில் பேசினார். காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா பகுதிகளில் காவல் நிலையங்களின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முஹம்மது சயீத்…இந்தத் தாக்குதலுக்குப் பின் உள்ள சக்திகள் அடையாளம் காணப்பட வேண்டும். மாநிலத்தில் அமைதி நிலவவே மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்து, ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல்களால் மக்களின் உறுதியை அசைத்துவிட முடியாது. கராச்சியில் சர்ச் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பெஷாவர் பள்ளியில் தாக்குதல் நடத்தியவர்கள்… இவர்கள் எல்லாம் யார்?. பாகிஸ்தானும்தான் பயங்கரவாத வலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இந்தியாவுடன் நட்பும் அமைதியும் நிலவ வேண்டும் எனக் கருதினால் அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் அவரது தலைமையிலான அரசும் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டும். மக்களை கொல்லும் அளவுக்கு அவர்களுக்கு இஸ்லாத்தில் கற்றுத் தரப்பட்டது என்ன என எனக்குத் தெரியவில்லை. இவர்களைக் கட்டுப்படுத்த எங்களால் முடியவில்லை என்று நவாஸ் ஷெரிப் கூறினால், பின்னர் அது எங்களின் போராகவும் மாறிவிடும் என்றார்.
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப் படுத்தாவிட்டால் அது எங்கள் போராகி விடும்: காஷ்மீர் முதல்வர்
Popular Categories