பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப் படுத்தாவிட்டால் அது எங்கள் போராகி விடும்: காஷ்மீர் முதல்வர்

mufti-mohammed-syed பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கட்டுப் படுத்தாவிட்டால், அது எங்களின் போர் ஆகி விடும் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் சட்டமன்றத்தில் பேசினார். காஷ்மீரின் கதுவா மற்றும் சம்பா பகுதிகளில் காவல் நிலையங்களின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றிய ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முஹம்மது சயீத்…இந்தத் தாக்குதலுக்குப் பின் உள்ள சக்திகள் அடையாளம் காணப்பட வேண்டும். மாநிலத்தில் அமைதி நிலவவே மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்து, ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல்களால் மக்களின் உறுதியை அசைத்துவிட முடியாது. கராச்சியில் சர்ச் மீது தாக்குதல் நடத்தியவர்கள், பெஷாவர் பள்ளியில் தாக்குதல் நடத்தியவர்கள்… இவர்கள் எல்லாம் யார்?. பாகிஸ்தானும்தான் பயங்கரவாத வலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இந்தியாவுடன் நட்பும் அமைதியும் நிலவ வேண்டும் எனக் கருதினால் அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் அவரது தலைமையிலான அரசும் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டும். மக்களை கொல்லும் அளவுக்கு அவர்களுக்கு இஸ்லாத்தில் கற்றுத் தரப்பட்டது என்ன என எனக்குத் தெரியவில்லை. இவர்களைக் கட்டுப்படுத்த எங்களால் முடியவில்லை என்று நவாஸ் ஷெரிப் கூறினால், பின்னர் அது எங்களின் போராகவும் மாறிவிடும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories