30-03-2023 1:35 AM
More
    Homeஇந்தியாஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி!

    To Read in other Indian Languages…

    ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி!

    ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மட்டும் வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில், இன்று காலை நீதிமன்றத்தில் மதிமுக., பொதுச் செயலர் வைகோ ஆஜர் ஆனார். தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி ஏ.கே.கோபால் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. தம்மையும் எதிர்மனுதாரராக சேர்க்க கோரி வைகோ மனுத்தாக்கல் செய்திருந்தார். தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார்.

    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்றது தேசிய பசுமை தீர்ப்பாயம். நிலத்தடி நீர், மாசுபாடு ஏற்படுத்தாத நிலையில் விதிகளை மீறவில்லை என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. நிலத்தடி மாசு என்று கூறி ஆலையை மூட ஆணையிட்டதை ஏற்க முடியாது என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது.

    வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்தது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    1 COMMENT

    1. மற்றுமொரு போராட்டத்துக்கு வழிகொடுத்ததா தேசிய பசுமை தீர்ப்பாயம் ? அல்லது இந்த உத்தரவை மதித்து நடந்துகொள்வார்களா அந்த ஊர் பொதுமக்கள் ?

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    2 × 1 =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...