January 25, 2025, 8:19 AM
23.2 C
Chennai

ராமநாதபுரம் அருகே பஸ் வேன் மோதல்: 5 பேர் பலி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தனியார் பஸ்ஸுடன் வேன் மோதியதில் 5 பேர் பலியாயினர். ராமநாதபுரத்தில் இருந்து இன்று காலை ஒரு தனியார் பஸ் பரமக்குடிக்கு புறப்பட்டுச் சென்றது. காலை 9 மணி அளவில் ராமநாதபுரம்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அருகே உள்ள கீழக்கோட்டை பகுதியில் பஸ் சென்றபோது எதிரே பரமக்குடியில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு சத்திரக்குடிக்கு வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. வேனுடன் மோதிய வேகத்தில் பஸ் கவிழ்ந்தது. பஸ் பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். இதை அடுத்து, அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்றனர். இந்த விபத்தில் விரகனூரைச் சேர்ந்த லட்சுமி (19), கவுசல்யா (19), ராமநாதபுரத்தை சேர்ந்த வினோதினி (19) முருகன் (28) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பலியான 3 பெண்களும் கல்லூரி மாணவிகள். இந்த விபத்தில் வேன் டிரைவர் பரமக்குடி புதுநகரிச் சேர்ந்த முகமது அப்துல்லா (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் காயம் அடைந்த 30–க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினரும், போலீசாரும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றிய காஷ்மீர் சட்டசபை!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.