ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தனியார் பஸ்ஸுடன் வேன் மோதியதில் 5 பேர் பலியாயினர். ராமநாதபுரத்தில் இருந்து இன்று காலை ஒரு தனியார் பஸ் பரமக்குடிக்கு புறப்பட்டுச் சென்றது. காலை 9 மணி அளவில் ராமநாதபுரம்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அருகே உள்ள கீழக்கோட்டை பகுதியில் பஸ் சென்றபோது எதிரே பரமக்குடியில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு சத்திரக்குடிக்கு வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. வேனுடன் மோதிய வேகத்தில் பஸ் கவிழ்ந்தது. பஸ் பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். இதை அடுத்து, அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்றனர். இந்த விபத்தில் விரகனூரைச் சேர்ந்த லட்சுமி (19), கவுசல்யா (19), ராமநாதபுரத்தை சேர்ந்த வினோதினி (19) முருகன் (28) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பலியான 3 பெண்களும் கல்லூரி மாணவிகள். இந்த விபத்தில் வேன் டிரைவர் பரமக்குடி புதுநகரிச் சேர்ந்த முகமது அப்துல்லா (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் காயம் அடைந்த 30–க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினரும், போலீசாரும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் அருகே பஸ் வேன் மோதல்: 5 பேர் பலி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari