ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தனியார் பஸ்ஸுடன் வேன் மோதியதில் 5 பேர் பலியாயினர். ராமநாதபுரத்தில் இருந்து இன்று காலை ஒரு தனியார் பஸ் பரமக்குடிக்கு புறப்பட்டுச் சென்றது. காலை 9 மணி அளவில் ராமநாதபுரம்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அருகே உள்ள கீழக்கோட்டை பகுதியில் பஸ் சென்றபோது எதிரே பரமக்குடியில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு சத்திரக்குடிக்கு வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. வேனுடன் மோதிய வேகத்தில் பஸ் கவிழ்ந்தது. பஸ் பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். இதை அடுத்து, அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து சென்றனர். இந்த விபத்தில் விரகனூரைச் சேர்ந்த லட்சுமி (19), கவுசல்யா (19), ராமநாதபுரத்தை சேர்ந்த வினோதினி (19) முருகன் (28) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பலியான 3 பெண்களும் கல்லூரி மாணவிகள். இந்த விபத்தில் வேன் டிரைவர் பரமக்குடி புதுநகரிச் சேர்ந்த முகமது அப்துல்லா (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் காயம் அடைந்த 30–க்கும் மேற்பட்டோரை தீயணைப்பு துறையினரும், போலீசாரும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் அருகே பஸ் வேன் மோதல்: 5 பேர் பலி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

