January 25, 2025, 2:34 AM
24.9 C
Chennai

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற போராட்டம் நியாயம்தானா? ஒரு ஃபேஸ்புக் பயனாளியின் பதிவு

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தாலும் கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் வலுவடைந்துள்ளது. தூத்துகுடி எந்த பக்கம் உள்ளது என்று தெரியாத நெட்டிசன்கள் கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு என சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் போடுகின்றனர். இந்த ஒரே ஒரு ஆலையினால் ஒரு ஊரே மாசு அடைகிறதா? உண்மையில் என்ன நடக்கின்றது? இதுகுறித்து ஃபேஸ்புக் பயனாளியின் ஒரு பதிவை தற்போது பார்ப்போம்

சிங்கப்பெருமாள் கோவிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் 42 கிலோமீட்டர்கள் இரண்டு பக்கமும் இடைவெளி இல்லாமல் தொழிற்ச்சாலைகள். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் தொழிற்ச்சாலைகள் நிறைந்துள்ளன. இங்கெல்லாம் பெரும்பாலான தொழிலாளர்கள் தென்மாவட்டங்களில் இருந்து செல்பவர்கள். இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்கள் கூட பெரும்பாலும் தூத்துக்குடித் துறைமுகம் வந்துதான் பிற பகுதிகளுக்கு செல்கின்றன. மின்சாரம் கூட பெருமளவிற்கு திருநெல்வேலி, கண்னியாகுமரி மாவட்ட காற்றாலைகள், Solar மின் உற்பத்தி மேலும் கூடங்குளத்தின் அணு மின்நிலையம் மூலம் செல்கிறது.

ALSO READ:  ஒரு நாள் வெடிக்கிறதால ஒண்ணும் ஆகிடாது; பட்டாசு வெடிங்க, தீபாவளிய சந்தோசமா கொண்டாடுங்க!

ஆனால், தென்மாவட்டங்களில் உறுப்படியான தொழிற்ச்சாலைகள் எதுவும் கிடையாது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் இருபுறமும் விவசாயமும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை தொழிற்ச்சாலைகளும் அவ்வளவாகக் கிடையாது. தென்மாவட்டங்களிலிருந்து மனிதவளம் முதற்கொண்டு அனைத்தையும் பெற்றுக்கொண்டு சென்னை பொருளாதாரத்தை வளர்க்கிறது. தென் மாவட்ட மக்கள் வேலை வாய்புகளுக்காக பல நூறு கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து வாழ வேண்டியுள்ளது. விடுமுறை நாட்கள் வந்து விட்டால் கோயம்பேட்டிலும், எக்மோரிலும் அலைபாயும் மக்கள்

இந்த நிலையில் ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளையும் பொய்யான சில காரணங்களைக் கூறி மூடிவிடத் துடிக்கும் பிரிவினைவாதிகள். உண்மையில் தொழிற்ச்சாலை இவர்களுக்கு பிரச்சினை இல்லை. இதைச் சாக்காக வைத்து மத்திய அரசை எதிர்க்க வேண்டும், கெட்ட பெயரை உருவாக்க வேண்டும். இதே போன்றுதான் கூடன்குளம், டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டம், தேனி நியூட்ரினோதிட்ட எதிர்ப்புகள் எல்லாமே. இத்தனைக்கும் இவற்றில் எதுவுமே மோடி கொண்டுவந்த திட்டங்கள் அல்ல. அவ்வளவு ஏன்? இப்பொழுது மோடி அரசு 10,000 கோடிகளில் அறிவித்துள்ள சேலம், சென்னை எட்டு வழி விரைவுச் சாலைச் திட்டத்தைக் கூட தொழிலதிபர் ஜின்டால் அவர்களது கம்பெனியின் வளர்ச்சிக்காக என்று கிளப்பிவிட்டு மக்களை குழப்பி வருகிறது ஒரு கூட்டம். நிச்சயமாக இவர்கள் நிலம் கையகப்படுத்த விடமாட்டார்கள். ஊடகங்களும் ஊதிப் பெரிதாக்கி மோடியை வில்லனாக சித்தரிக்கும். இது மட்டுமல்ல நாளை நதிநீர் இணைப்புத் திட்டம் வந்தாலும் இதேதான் நடக்கும்.

ALSO READ:  குறைந்த விலை, அதிக கையூட்டு; கரும்பு விவசாயிகள் துயர் துடைக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்!

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி நகரில் காற்று மாசடைந்து விட்டதாக எந்த ஆய்வறிக்கையும் இல்லை. சொல்லப்போனால் காற்று மாசில் முதல் 500 நகரங்கள் பட்டியலில் கூட தூத்துக்குடி வரவில்லை. இந்த வீணாய்ப்போன அரசியல்வாதிகளை நம்பி நாட்டின் காப்பர் தேவையில் 36%த்தை தயாரித்துக் கொடுக்கும் தொழிற்ச்சாலையை மூட வைத்து விடாதீர்கள். கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்களால் நிரந்தரமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள் அதிகம். வேலையிழந்த அப்பாவிகளும் மிக, மிக அதிகம். எனவே, ஏமாந்து விடாதீர்கள். மாறாக, தென்மாவட்டங்களுக்கு அதிகமாக தொழிற்ச்சாலைகளை ஒதுக்க வேண்டும் என்று போராடுங்கள்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!