ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற போராட்டம் நியாயம்தானா? ஒரு ஃபேஸ்புக் பயனாளியின் பதிவு

sterlite tuticorin - 2026

ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தாலும் கடந்த சில நாட்களாக இந்த போராட்டம் வலுவடைந்துள்ளது. தூத்துகுடி எந்த பக்கம் உள்ளது என்று தெரியாத நெட்டிசன்கள் கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு என சமூக வலைத்தளங்களில் ஸ்டேட்டஸ் போடுகின்றனர். இந்த ஒரே ஒரு ஆலையினால் ஒரு ஊரே மாசு அடைகிறதா? உண்மையில் என்ன நடக்கின்றது? இதுகுறித்து ஃபேஸ்புக் பயனாளியின் ஒரு பதிவை தற்போது பார்ப்போம்

சிங்கப்பெருமாள் கோவிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் 42 கிலோமீட்டர்கள் இரண்டு பக்கமும் இடைவெளி இல்லாமல் தொழிற்ச்சாலைகள். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் தொழிற்ச்சாலைகள் நிறைந்துள்ளன. இங்கெல்லாம் பெரும்பாலான தொழிலாளர்கள் தென்மாவட்டங்களில் இருந்து செல்பவர்கள். இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்கள் கூட பெரும்பாலும் தூத்துக்குடித் துறைமுகம் வந்துதான் பிற பகுதிகளுக்கு செல்கின்றன. மின்சாரம் கூட பெருமளவிற்கு திருநெல்வேலி, கண்னியாகுமரி மாவட்ட காற்றாலைகள், Solar மின் உற்பத்தி மேலும் கூடங்குளத்தின் அணு மின்நிலையம் மூலம் செல்கிறது.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

ஆனால், தென்மாவட்டங்களில் உறுப்படியான தொழிற்ச்சாலைகள் எதுவும் கிடையாது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் இருபுறமும் விவசாயமும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை தொழிற்ச்சாலைகளும் அவ்வளவாகக் கிடையாது. தென்மாவட்டங்களிலிருந்து மனிதவளம் முதற்கொண்டு அனைத்தையும் பெற்றுக்கொண்டு சென்னை பொருளாதாரத்தை வளர்க்கிறது. தென் மாவட்ட மக்கள் வேலை வாய்புகளுக்காக பல நூறு கிலோமீட்டர்கள் இடம் பெயர்ந்து வாழ வேண்டியுள்ளது. விடுமுறை நாட்கள் வந்து விட்டால் கோயம்பேட்டிலும், எக்மோரிலும் அலைபாயும் மக்கள்

இந்த நிலையில் ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளையும் பொய்யான சில காரணங்களைக் கூறி மூடிவிடத் துடிக்கும் பிரிவினைவாதிகள். உண்மையில் தொழிற்ச்சாலை இவர்களுக்கு பிரச்சினை இல்லை. இதைச் சாக்காக வைத்து மத்திய அரசை எதிர்க்க வேண்டும், கெட்ட பெயரை உருவாக்க வேண்டும். இதே போன்றுதான் கூடன்குளம், டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டம், தேனி நியூட்ரினோதிட்ட எதிர்ப்புகள் எல்லாமே. இத்தனைக்கும் இவற்றில் எதுவுமே மோடி கொண்டுவந்த திட்டங்கள் அல்ல. அவ்வளவு ஏன்? இப்பொழுது மோடி அரசு 10,000 கோடிகளில் அறிவித்துள்ள சேலம், சென்னை எட்டு வழி விரைவுச் சாலைச் திட்டத்தைக் கூட தொழிலதிபர் ஜின்டால் அவர்களது கம்பெனியின் வளர்ச்சிக்காக என்று கிளப்பிவிட்டு மக்களை குழப்பி வருகிறது ஒரு கூட்டம். நிச்சயமாக இவர்கள் நிலம் கையகப்படுத்த விடமாட்டார்கள். ஊடகங்களும் ஊதிப் பெரிதாக்கி மோடியை வில்லனாக சித்தரிக்கும். இது மட்டுமல்ல நாளை நதிநீர் இணைப்புத் திட்டம் வந்தாலும் இதேதான் நடக்கும்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி நகரில் காற்று மாசடைந்து விட்டதாக எந்த ஆய்வறிக்கையும் இல்லை. சொல்லப்போனால் காற்று மாசில் முதல் 500 நகரங்கள் பட்டியலில் கூட தூத்துக்குடி வரவில்லை. இந்த வீணாய்ப்போன அரசியல்வாதிகளை நம்பி நாட்டின் காப்பர் தேவையில் 36%த்தை தயாரித்துக் கொடுக்கும் தொழிற்ச்சாலையை மூட வைத்து விடாதீர்கள். கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்களால் நிரந்தரமாக மூடப்பட்ட தொழிற்சாலைகள் அதிகம். வேலையிழந்த அப்பாவிகளும் மிக, மிக அதிகம். எனவே, ஏமாந்து விடாதீர்கள். மாறாக, தென்மாவட்டங்களுக்கு அதிகமாக தொழிற்ச்சாலைகளை ஒதுக்க வேண்டும் என்று போராடுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Topics

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories