சாதி ரீதியில் பிளவுபடுத்தும் விஜய் டிவி நீயா நானாவின் கிறிஸ்துவ அஜெண்டா

Neeya Naana vijay tv - 2026

விஜய் டிவி.,யில் ஒளிபரப்பப் படும் நீயா நானா என்ற டாக் ஷோ..வை விரும்பிப் பார்ப்பவர்கள் பலர். ஆனால், அதில் ஒரு சார்பான கருத்துகளே முன் வைக்கப்படுகின்றன என்று அங்கலாய்க்கிறார்கள் பார்வையாளர்கள்.

ஃப்ரீடம் ஆஃப் எக்ஸ்ப்ரஷன் என்று, பேச்சு சுதந்திரம் என கொட்டை எழுத்தில் லோகோவுக்குக் கீழே போட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன பேச வேண்டும் என நினைக்கிறார்களோ அதைத்தான் பார்வையாளர்கள் பேச வேண்டியுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் அவர்களாக தனிப்பட்ட கருத்துகளை சொன்னாலும் அவை எடிட் செய்யப் பட்டு இருட்டடிப்பு ஆகின்றன என்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியின் லோகோவும் கூட, ரயில்களில் கடைசிப் பெட்டியில் மோதி விடாமல் இருப்பதற்காக வரையப்பட்டுள்ள, பார்ப்பதற்கு  X- என்ற எதிர்ப்பு மார்க்-உடன் தான் போடப்பட்டுள்ளது. எனவே, நீயா நானாவை வேண்டாம் என்று தவிர்க்க வேண்டுமென்பதாக அந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர்களே போடும் போது, நாம் ஏன் அதை விழுந்து விழுந்து பார்க்க வேண்டும் என்று கிண்டல் செய்கிறார்கள் சமூக ஊடகங்களில்!

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

நிகழ்ச்சியை இயக்கும் ஆண்டனி, கிறிஸ்துவ மத பிரசாரத்துக்கு அந்த டிவி.,நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு ஏற்ப, இந்து மதத்தை சீண்டிப் பார்க்கும் தலைப்புகளில்தான் இதுவரை விஜய் டிவி.,யில் நீயா நானா நிகழ்ச்சிகள் அமைக்கப் பட்டிருக்கின்றனவே தவிர, கிறிஸ்துவ மதத்தை கேள்வி கேட்கும் விதமாக இதுவரை எந்த நிகழ்ச்சியும் நடத்தியதில்லை என்று கோடிட்டுக் காட்டுகிறார்கள் பார்வையாளர்கள்.

இப்போது சாதி ரீதியில் இந்துக்களை மீண்டும் மீண்டும் இழிவு செய்து பிளவுபடுத்தும் கிறிஸ்துவ மிஷனரிகளின் அஜெண்டாவை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார்கள் நீயா நானா படக் குழுவினர் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் சிலரே சமூக ஊடகங்களில், நிகழ்ச்சியின் பின்னணியில் நிகழும் கோல்மால்களை, குள்ளநரித் தந்திரங்களை புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.

அப்படி வெளிவந்த ஒரு கருத்தில், சாதி ரீதியாக பிரச்னை ஏற்படுத்துவதற்கென்றே தலைப்பை கொடுத்து பேச வைத்தார்கள் என்று கூறுகிறார்கள். அவர்களில் ஒருவர் வெளியிட்ட கருத்து இது….

விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பெயருக்கு பின்னால் ஜாதி பெயர் போடுவது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசினேன்…

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

அங்கே நடந்த விவாதத்தில் முழுக்க முழக்க இந்து மதத்திற்கு எதிரான மற்றும் இந்துகளை பிரித்து மதமாற்றும் சூழ்ச்சியே அரங்கேறியது…

ஒரு தரப்பில் அறியாத இளைஞர் கூட்டமும், மறுபுறம் திராவிட.கழக நபர்கள், சிறுபான்மையினர் மற்றும் கம்யூனிஸ்ட் போன்ற சதிகார கூட்டமும் பேச வைக்கப்பட்டனர்…

எங்களிடம் பெயர் கேட்ட கோபிநாத் எதிர்தரப்பில் யாரிடமும் பெயர்கூட கேட்க வில்லை… ஏன் என்றால் பெயரிலேயே அவர்கள் யாரென்று தெரிந்துவிடும் என்பதால் தான்.. அங்கே சம்பந்தமே இல்லாமல் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் மாட்டுகறி உண்பதை பற்றியும், இந்து மதத்தையும், இந்து அமைப்புகளையும் பற்றியும் அவதூறாக பேசினார்…

இதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.. இதில் மிக பெரிய சதி கோபிநாத்தின் சுய சிந்தனையில் அங்கே கேள்விகள் எழுப்பப் படவில்லை….

அங்கே இயக்குனர் ஆண்டனி மற்றும் பத்துபேர் கொண்ட குழு மைக்ரோ போன் மூலம் கொடுக்கும் தகவலை கேட்பது மட்டுமே கோபிநாத்தின் வேலையாக இருந்தது..

இங்கே ஒரு சவாலை நான் கோபிநாத்திற்கு வைக்கின்றேன்… காதில் மைக்ரோ போன் இல்லாமல் விவாதத்தில் தொகுத்து வழங்க தயாரா?

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

கருத்து: Rajeshwari Shastry

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories