ஷிப்டு போட்டு சாமி கும்பிட அனுப்பி வைங்கப்பா… நெல்லை காவல் கண்காணிப்பாளரின் உத்தரவு!

nellai district police office - 2026

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஓர் அசத்தல் உத்தரவை போட்டிருக்கிறாராம்…! சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள் மாவட்ட காவல்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்.

பங்குனி உத்திரத்தை  முன்னிட்டு அதிக அளவில் பாதுகாப்புப் பணிகளில் காவலர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. இதற்காக  காவலர்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள். ஆனால், அவர்களின் குடும்பத்தாரும் இன்று பங்கு உத்திரம் என்பதால் கோயில்களுக்குச் செல்லவும், சாமி கும்பிடவும் விருப்பப்பட்டு செல்வார்கள் என்பதால், காவலர்களும் தங்கள் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட யோசனை செய்துள்ளார் அருண் சக்திகுமார்.

arun sakthi kumar - 2026

இன்று முருகன் கோயில், சாஸ்தா உள்ளிட்ட குல தெய்வம் கோவில்களுக்கு காவலர்களும் தங்கள் குடும்பத்தினருடன் செல்ல ஏதுவாக, ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளாராம். அதன்படி, அதிகாரிகள், அலுவலைக் காரணம் காட்டி, காவலர்களை அனுப்பாமல் இருக்கக் கூடாது எனவும், ஷிப்ட் முறையில் காவலர்களை அவர்கள் குடும்பத்தினருடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாராம்…

காவலர்களின் உணர்வுகளை மதிப்பது தான், ஒவ்வொரு அதிகாரிகளின் “Good Supervising Activities” என்று ஓப்பன் மைக்கில்  அருண் சக்திகுமார் கூறினார் என்று புளகாங்கிதமடைகிறார்கள் நெல்லை மாவட்ட காவல் துறையினர்.

அண்மைக் காலமாக காவல் துறையில் கீழ் நிலைக் காவலர்கள் சிலர், ஏன் அதிகாரிகளில் ஓரிருவர் கூட பணி நேரத்தில், பணியிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. இதற்கு, பணிச் சுமையும், மன அழுத்தமும் உயரதிகாரிகளின் நெருக்கடியும் காரணம் என்று பரவலாகக் கூறப்படுகிறது. இதனால்தான், காவல் துறையினரிடையே மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக சென்னையில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories