ஷிப்டு போட்டு சாமி கும்பிட அனுப்பி வைங்கப்பா… நெல்லை காவல் கண்காணிப்பாளரின் உத்தரவு!

nellai district police office - 2026

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஓர் அசத்தல் உத்தரவை போட்டிருக்கிறாராம்…! சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள் மாவட்ட காவல்துறை ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்.

பங்குனி உத்திரத்தை  முன்னிட்டு அதிக அளவில் பாதுகாப்புப் பணிகளில் காவலர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. இதற்காக  காவலர்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள். ஆனால், அவர்களின் குடும்பத்தாரும் இன்று பங்கு உத்திரம் என்பதால் கோயில்களுக்குச் செல்லவும், சாமி கும்பிடவும் விருப்பப்பட்டு செல்வார்கள் என்பதால், காவலர்களும் தங்கள் குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட யோசனை செய்துள்ளார் அருண் சக்திகுமார்.

arun sakthi kumar - 2026

இன்று முருகன் கோயில், சாஸ்தா உள்ளிட்ட குல தெய்வம் கோவில்களுக்கு காவலர்களும் தங்கள் குடும்பத்தினருடன் செல்ல ஏதுவாக, ஓர் உத்தரவைப் பிறப்பித்துள்ளாராம். அதன்படி, அதிகாரிகள், அலுவலைக் காரணம் காட்டி, காவலர்களை அனுப்பாமல் இருக்கக் கூடாது எனவும், ஷிப்ட் முறையில் காவலர்களை அவர்கள் குடும்பத்தினருடன் குலதெய்வம் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாராம்…

ALSO READ:  ஈரான் விவகாரத்தில்... காங்கிரஸின் ‘யு டர்ன்’!

காவலர்களின் உணர்வுகளை மதிப்பது தான், ஒவ்வொரு அதிகாரிகளின் “Good Supervising Activities” என்று ஓப்பன் மைக்கில்  அருண் சக்திகுமார் கூறினார் என்று புளகாங்கிதமடைகிறார்கள் நெல்லை மாவட்ட காவல் துறையினர்.

அண்மைக் காலமாக காவல் துறையில் கீழ் நிலைக் காவலர்கள் சிலர், ஏன் அதிகாரிகளில் ஓரிருவர் கூட பணி நேரத்தில், பணியிடத்திலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. இதற்கு, பணிச் சுமையும், மன அழுத்தமும் உயரதிகாரிகளின் நெருக்கடியும் காரணம் என்று பரவலாகக் கூறப்படுகிறது. இதனால்தான், காவல் துறையினரிடையே மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக சென்னையில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories