ராக்கெட் ராஜாவுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன்!

Published:

madurai high court - 2026

மதுரை: நெல்லையில் பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராக்கெட் ராஜா தினமும் காலை, மாலை வேளைகளில் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லையில் பேராசிரியர் செந்தில் குமார் கொலை செய்யப் பட்ட வழக்கில் தனது ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்த நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, தனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் ராக்கெட் ராஜா கூறியிருந்தார்.

இதை அடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தாரணி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Related articles

Recent articles

spot_img