Breaking News
கொளுத்தும் வெயிலுக்கு ‘குட் பை’; குளு குளு மழைக்கு ‘வெல்கம்’
அதிகம் வாட்டி வதைக்காத அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகம் முழுவதும் அடுத்த வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மூச்சுத் திணறலுடன் பேசும் ஜெயலலிதாவின் ஆடியோ: கைப்பட எழுதிய ‘பிடித்த உணவுப் பட்டியல்’!
கடந்த 2016 ஆகஸ்ட் 2ஆம் தேதி தனக்கு என்ன உணவு தேவை என்பது குறித்து ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் தாக்கல் செய்த பட்டியல் வெளியீடு #Jayalalithaa
தேடப்பட்ட பண்ருட்டி வேல்முருகன்; தூத்துக்குடியில் கைதாகி புழல் சிறையில் அடைப்பு!
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில், தூத்துக்குடியில் கைது செய்யப் பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.
எடப்பாடியார் ஆட்சியில் 23 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளன: ஆர்.பி. உதயகுமார்
மேலும், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால்தான், அமைச்சர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என்று விளக்கம் அளித்த உதயகுமார், அங்கு இணையதள சேவை துண்டிப்பு நிரந்தரமானது அல்ல என்று கூறினார்.
வன்னியர் சங்க தலைவர் குரு மரணம்: வட மாவட்டங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு
திருவள்ளூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பஸ்கள் உடைக்கப்பட்டன. இப்படி 9 மாவட்டங்களில் மொத்தம் 75 பஸ்கள் உடைக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்தப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசி தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.
புதுமணத் தம்பதியுடன் சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலின்!
அப்போது அங்கே வந்த போலீஸார் செங்கல்பட்டு அருகே அச்சிறுப்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் மற்றும் தொண்டர்களைக் கைது செய்தனர். புதுமண தம்பதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் கைது செய்யப்பட்டனர்.
காடுவெட்டி குரு உடலுக்கு அன்புமணி அஞ்சலி
சென்னை: மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் உடலுக்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அஞ்சலி செலுத்தினார்.
கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ் குமார் கைது: புழல் சிறையில் அடைப்பு
பூபேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூன் 8 வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
காடுவெட்டி குரு மறைவுக்கு பாமக., நிறுவுனர் ராமதாஸ் இரங்கல்
எனது வாழ்வில் இன்று வரை சந்திக்காத, தாங்க முடியாத மிகப்பெரிய துயரத்தை நான் இப்போது சந்தித்திருக்கிறேன்.
மெட்ரோ ரயிலில் 3 நாட்களுக்கு இலவசமா பயணிக்கலாம்!: அலைமோதும் கூட்டம்!
மெட்ரோ ரயிலில் 3 நாட்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் முதல் விமானநிலையம் வரையிலான புதிய மெட்ரோ ரயிலை முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
சென்னையில் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை: தொடங்கி வைத்த எடப்பாடி
இந்நிலையில் இன்று, பணிகள் முடிவடைந்த நிலையில், சென்னை சென்ட்ரல் - நேரு பூங்கா, டிஎம்எஸ் - சின்னமலை இடையிலான சுரங்க வழிப் பாதைகளில் ரயில் போக்குவரத்து தொடங்கி வைக்கப் பட்டது.
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு காலமானார்
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வன்னியர் சங்க தலைவரும், பாமக., முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குருவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.