ஸ்டெர்லைட் விவகாரத்தை அரசியலாக்க முடியாமல் போனதால் எதிர்க்கட்சிகள் குற்றத்தை தேடுகின்றனர் என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அரசாணை பற்றிய ஸ்டாலின் புகாருக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அப்போது அவர், தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மரியாதை இல்லை என்கிறாரா ஸ்டாலின்?
நீதிமன்றத்துக்கு ஸ்டெர்லைட் விவகாரம் சென்றாலும் தமிழக அரசின் நிலைப்பாடு ஆலை மூடல்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
முன்னதாக, பேரவை தீர்வுகளை ஒத்திவைத்து ஸ்டெர்லைட் பற்றி இன்று முழுவதும் விவாதிக்க கோரி தீர்மானம் கொண்டுவர திமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஒத்திவைப்பு தீர்மானம் கோரி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நோட்டீஸ் கொடுத்தார். மேலும், சட்டப்பேரவையின் 56 விதியின்படி ஸ்டெர்லைட் விவகாரம் துப்பாக்கிசூடு பற்றி விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் உள்நோக்கம் இருப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது




