February 21, 2026, 2:22 PM
30.4 C
Chennai

துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளித்தது யார்?: ஆளுநருக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம்

24 May28 Kamal - 2026தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதமானது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மய்யம் விசில் செயலியில் குடிமக்களால் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் இன்று புகார்க்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில், ஒழுங்குமுறை விதிகளை அப்பட்டமாக மீறி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுச்சூழலை கெடுத்ததால் ஸ்டெர்லைட்டுக்கு சுப்ரீம்கோர்ட் ரூ.100 கோடி அபராதம் விதித்தது. இத்தகைய ஆலையை எதிர்த்து மக்கள் அமைதியான முறையில் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் அமைதி போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. கலவரத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இணைய வசதிகளும் துண்டிக்கப்பட்டன, இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. இவை அனைத்தும் குறித்து தாங்கள் அறிந்திருக்கும் நிலையிலும் தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அதில்..முதலாவதாக ‘துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளித்தது யார்?’ என கேட்கப்பட்டுள்ளது. 2-துப்பாக்கி சூடு நடத்த கட்டளையிடப்பட்ட சரியான இடம் எது?, 3-எவ்வகையான ஆயுதங்கள் பயன்படுத்த கட்டளையிடப்பட்டன?, 4-ஆனால் எவ்வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. மக்கள் நீதி மையத்தின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்குமா? என கமல் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை சீர்குளைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள கமல், மாநில அரசு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories