February 7, 2025, 2:15 PM
30.4 C
Chennai

தென்காசி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ள இடங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு.!

தென்காசி மக்களின் நீண்ட நாள் கனவான தென்காசி தனிமாவட்டம் அமைக்கும் கோரிக்கை இருந்து வந்தது.

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் சமீபத்தில் அறிவித்தார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசி தனி மாவட்டமாக உருவாகிவரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மற்ற அரசு அலுவலகங்கள் எங்கே அமைப்பது? என்பது குறித்து அரசு உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.

இதனையடுத்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் விதத்தில் தனி அதிகாரியாக அருண் சுந்தர் தயாளன் நியமனம் செய்யப்பட்டார்.

அவரது தலைமையில் பொதுமக்களிடம் நெல்லை மற்றும் குற்றாலத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இதனை தொடா்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் ஏற்கனவே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கலாம் என தென்காசி சட்டமன்ற உறுப்பினா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் வேறு எங்கு அமைக்கலாம்? என 15 இடங்களை வருவாய்த்துறையினர் தேர்வு செய்து வைத்திருந்தனர்.

அப்படி வருவாய் துறையினா் தேர்வு செய்த இடங்களையும் மற்ற இடங்களிலும் அரசு உயர்அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் காலையில் இருந்து மதியம் வரை இந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவா் ஷில்பாபிரபாகர்சதீஷ் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.

மேலும் இந்த உயர்மட்ட அதிகாரிகள் குழு செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர், கொடிக்குறிச்சி, ஆய்க்குடி, பாட்டாகுறிச்சி, ஆயிரப்பேரி ஆகிய அனைத்து இடங்களையும் ஆய்வு செய்தனர்.

பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், வருவாய்த்துறையினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க இடங்களை தேர்வு செய்து அதன் வரைபடங்களையும் கொடுத்தனர்.

இந்த இடங்களை நாங்கள் நேரில் சென்று பார்வையிட்டோம்.

மேலும் ஆய்க்குடியில் 20 ஏக்கர் பரப்பளவு நிலத்தை தனியார் ஒருவர் அரசுக்கு இலவசமாக தருவதாக கூறியுள்ளார்.

ஆயிரப்பேரி பகுதியில் ஒரே இடம்தான் அரசுக்கு சொந்தமாக உள்ளது.

இவை அனைத்தையும் ஆய்வு செய்தோம்.

இதுகுறித்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்போம். இதுகுறித்து அரசு முடிவு செய்யும் என்றார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கோலாகலம்!

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா; பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்ப மிதவையில் சுற்றி வந்து சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் அருள் பாலித்தார்.

பஞ்சாங்கம் பிப்.07 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng ODI: தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் – நாக்பூர் – 6 பிப்ரவரி 2025 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

பஞ்சாங்கம் பிப்.06 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

Entertainment News

Popular Categories