பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று… பாஜக.,வில் இணைந்த கரூர் அரசியல் பிரமுகர்கள்!

Published:

joining bjp karur - 2026

பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையை ஏற்று, தாங்கள் பாஜக,,வில் இணைவதாக, கரூரில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பாஜ.,கட்சியில் இணைந்தனர்.

பாஜக., மாநிலத் தலைவர் L.முருகன், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், கரூர் மாவட்ட பார்வையாளர் டாக்டர் எம். சிவசுப்பிரமணியம் ஆகியோரின் ஒப்புதல்படி, கரூர் மாவட்ட தலைவர் K.சிவசாமி முன்னிலையில், கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் M.S. சரவணன் தலைமையில் கரூர் கிழக்குஒன்றியம் திருமுக்கூடலூர் கிராமத்திலிருந்து தே.மு.தி.க வில் இருந்து விலகி இளம் துரை கிளை செயலாளர், மற்றும் மாற்று கட்சியினர் துரைராஜ் சிவகுமார் மகா மணி,ஆகியோருடன் 10 பேர் தங்களை *பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து கொண்டார்.

joining bjp karur1 - 2026

அதே போல், கரூர் மாவட்ட தலைவர் K.சிவசாமி முன்னிலையில், பரமத்தி ஒன்றிய தலைவர் தங்கவேல், சிவ குணசேகரன் ஆகியோர்கள் தலைமையில் பரமத்தி ஒன்றியம் மொஞ்சனூர் கிராமத்திலிருந்து பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து தொட்டம்பட்டி ஆர். செந்தில்குமார், ஆர். முருகேசன், எஸ்.மதன்குமார் சி. வீரபூபதி, தி.மு.க இருந்து விலகி ம.தமிழரசன், வீரமணி B.திருநாவுக்கரசு, K.பிரபாகரன்,P.நாராயணன் கருஞ்செல்லிபாளையம் J.உதயகுமார் கே.பார்த்திப சிவம், ஆகியோருடன் 21 நபர்கள் தங்களை *பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து கொண்டார்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் V.நகுலன், P.செந்தில் மாவட்ட துணை தலைவர் N.கவிதா மருத்துவர் அணி மாவட்ட தலைவர் R.அர்விந்த் கார்த்திக் இளைஞரணி S.கார்த்திகேயன்,K.கௌதம்,R.சுரேஷ், தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Related articles

Recent articles

spot_img