பொது தகவல்கள்

காட்டூரில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம்!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.திமுக தலைவராக வாழ்ந்து மறைந்த கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது அவரது மகள் செல்வியின் எண்ணமாகும். இதையடுத்து தனது அண்ணனும் திமுக தலைவருமான ஸ்டாலினிடம் இது தொடர்பாக பேசிய அவர், அருங்காட்சியகத்தை எங்கு அமைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என அவர்கள் இருவரும் முடிவு செய்ததை அடுத்து, அருங்காட்சியகம் அமைப்பதற்காக மு.க.ஸ்டாலினும், செல்வியும் இணைந்து நிலம் வாங்கியுள்ளனர். அந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு நேற்று நடைபெற்றது. மு.க.ஸ்டாலினும், செல்வியும் திருவாரூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கே சென்று பத்திரப்பதிவு நடைமுறைகளை முடித்தனர்.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்த அருங்காட்சியகம் அமைக்கபட உள்ளது. அவர் தமிழ் நாட்டில் நடத்திய அரசியலை பிற்காலத்தில் மக்கள் மறந்து விடக்கூடாது அரசியல் சாதனைகளை இன்னும் பல்லாண்டு காலத்திற்கு மக்கள் நினைவுகூற வேண்டும் என்கிற நோக்கில் அருங்காட்சியம் உருவாக்கப்படவுள்ளதாம். சென்னையில் கலைஞர் நினைவாக அவரது நினைவிடம், அண்ணா அறிவலயம் உள்ளிட்ட கட்டிடங்கள் உள்ளதால், சென்னையை தாண்டி ஒரு ஊரில் அந்த அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என நினைத்தாராம் ஸ்டாலின்.முதலில் திருச்சியில் கருணாநிதிக்கு அருங்காட்சியகம் அமைக்கலாம் என திட்டமிடப்பட்டதாகவும், பிறகு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காட்டூர் கிராமத்தில் அமைக்கலாம் எனக் கேட்டுக்கொண்டதால் அதற்கு ஸ்டாலின் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.சர்வதேச தரத்தில் இந்த அருங்காட்சியகத்தை அமைப்பதற்காக இப்போதே பிரபல கட்டிட வடிவமைப்பாளர்களிடமிருந்து மாதிரி கட்டிடங்கள் வரைந்து கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அற்புதபலன்கள் தரும் வறுத்த பூண்டு.!

முதல் 1 மணிநேரத்தில் ழுண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.

10 வயது சிறுமியை வன்கொடுமைசெய்து கொன்ற கொடூரன்!

போன மாதம், 3 -ந்தேதி மளிகை கடைக்கு போன கவிதாவை காணவில்லை. அதனால் பதறிய பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பிரம்மதேசம் காவல்துறையில் புகார் தந்தனர். இதையடுத்து காவல்துறையினர் விசாரணையை துவக்கினர், அங்கிருந்த சிசிடிவி காமிராவையும் ஆய்வு செய்தனர்.

பஸ்ஸில் வரம்பு மீறிய நடத்துனர்! ஓங்கி அறைந்து போலிஸ் ஸ்டேசனில் நிறுத்திய பெண்!

ஏனென்றால் ஆண்களுக்கு பெண்கள் இது மாதிரியான விஷயங்களை வெளியில் சொல்லமாட்டார்கள் என்றும் அப்படி சொன்னால் அவமானம் அவர்களுக்கு தான் என்றும் இந்த சமூகம் பெண்களை மட்டுமே இதில் அவமான சின்னமாகவும் பெண்களை இழிவாக நோக்கின்ற மனப்பான்மையுடனும் ஆதிகாலம் தொட்டு பார்த்து பழகி இருப்பதால் அந்த எத்தனப்பேச்சு பேசியுள்ளார் கண்டக்டர் ராஜூ.

லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை : வடமாநில இளைஞரகள் 5 பேர் அதிரடி கைது!

புதுக்கோட்டையில் விடுதியில் தங்கியிருந்த 5 வட மாநில இளைஞர்களை திருச்சி தனிப்படை போலீசார் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுகவுக்கு தாவ ரெடியாக இருக்கும் 20திமுக எம்எல்ஏ-க்கள் திண்டுக்கல்சீனிவாசன்.!

எம்ஜிஆர், அண்ணாவால் வளர்ந்த திமுகவை ஸ்டாலின் தற்போது அவரது மகன் உதயநிதியை வைத்து வளர்க்கிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
- 2026

முகிலன் சிறையில் உண்ணாவிரதம் இருக்கபோவதாக அறிவிப்பு.!

"கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் சிறைவாசிகளாக இருக்கிற 300-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து தண்டனை அனுபவித்து வருகிறார்கள். வழக்கு வித்தியாசம் பார்க்காமல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி திருச்சி மத்திய சிறையில் நாளை (புதன் கிழமை) முதல் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருக்கிறேன்." என்றார்.

தொடர் மழை! வீடு இடிந்து ஒரு குடும்பத்தில் ஐவர் உயிரிழப்பு!

அமேதி மாவட்டத்தின் திலோய் தெஹ்ஸிலின் பகுதிக்கு உட்பட கிராமத்தில் வீடு இடிந்து விழுந்ததால் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகி மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்பு பணியை மேற்கொண்டனர்.

ஆரோக்கிய சமையல்: எலுமிச்சை தொக்கு!

எலுமிச்சைத் தொக்குதேவையானவை:எலுமிச்சம்பழம் – 10,மிளகாய்த்தூள் – 10 டீஸ்பூன்,பெருங்காயத்தூள், கடுகு – சிறிதளவு,எண்ணெய் – 4 டீஸ்பூன்,உப்பு – தேவையான அளவு.செய்முறை:எலுமிச்சம்பழங்களை...

சீன அதிபர் இந்திய வருகைக்கு முன் இம்ரான்கானுடன் சந்திப்பு!

சீன அதிபர் ஷி ஜின்பிங் தனது இந்திய வருகைக்கு முன்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அக்டோபர் 11-ஆம் தேதி இந்தியா வருகை தரும் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இருவரும் மாமல்லபுரத்துக்கு வருகை தரவுள்ளனர். அங்கு இரு நாடுகளின் உறவு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக இருநாடுகளுக்கு இடையிலான லடாக் எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது., பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அக்டோபர் 08-ஆம் தேதி சீனா செல்கிறார். அங்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாம்அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின்னர் இம்ரான் கான், சீனா செல்வது இது 3-ஆவது முறையாகும். சீன அதிபரின் இந்திய வருகைக்கு முன்பு பாகிஸ்தான் பிரதமர் சீனா செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

காந்திஜியின் இலட்சியங்கள் நமக்கு வழிகாட்டும் ஒளி: மோடி!

காந்திஜி அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லால் பகதூர் சாஸ்திரியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. கல்லறையில் "ஜெய் ஜவான் ஜய் கிஷாண்" என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது

தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமரும்,சீன அதிபரும்..! முதல்வர் மாமல்லை பயணம்!

இந்நிலையில், நாளை மாமல்லபுரம் செல்லவுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அவர், பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்கிறார்.
- 2026

Recent articles