சென்னை

சமூகத்தளங்களில் பெண்களை இழிவாக சித்திரித்தால் 3 ஆண்டு சிறை: சட்டத் திருத்தத்துக்கு மத்திய அரசு பரிசீலனை

இதன்படி, சமூக வலைத்தளங்களில் பெண்களை இழிவாக சித்திரிப்போருக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப் படும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய , மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

காலாவுக்கு இதைவிட அதிகமா எதிர்ப்பு இருக்கும்னு எதிர்பார்த்தேன்…: மனம் திறந்த ரஜினி!

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் வரும் வியாழனன்று வெளியாகிறது. ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பின்னர் வெளியாகும் படம் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளது.

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; டிக்கெட் பரிசோதகர் கைது!

பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் கொடுக்க, ஜோலார்பேட்டையில் தயாராக இருந்த ரயில்வே போலீஸார் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனீஷ் குமாருக்கு மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

கருணாநிதி வயதை ஸ்டாலின் சொல்ல… கேட்டு சிரித்த ஜெயலலிதாவும் நெட்டிசன்களும்!

ஆனால், இரு வருடங்களுக்கு முன்னர், ஸ்டாலின் இதே போல், 93 வயது என்பதை 63 என்று குறிப்பிட, அதைக் கேட்டு விழுந்துவிழுந்து சிரித்தார் ஜெயலலிதா. 

கருணாநிதியை சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து!

சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று மாலை தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் திமுக., தலைவருமான மு.கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து, அவருக்கு நாள் வாழ்த்து தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா; 67 ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை!

கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன், 10 ஆண்டுகள் தண்டனைக் காலம் நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 பேர் முன் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
- 2026

மருத்துவப் படிப்பு: கலந்தாய்வு தேதிகளில் மாற்றம்

முன்னதாக முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 7 முதல் 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனுமதியில்லாமல் எத்தனை நாட்களுக்கு உயிரிழந்தவர்களின் உடல்களை பாதுகாப்பது என நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது

ஜல்லிக்கட்டு நாயகன்னு புகழாதீங்க! காளைய அடக்குன்னாய்ங்கன்னா திண்டாட்டமாயிடும்! : ஓபிஎஸ் காமெடி!

ஜல்லிக்கட்டு நாயகன் என தம்மை அழைக்க வேண்டாம் எனக் கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நான்கு தலை பிரம்மா போல, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

கர்நாடக சதிக்கு பலியாகக் கூடாது; காவிரி  ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும்: ராமதாஸ்

கர்நாடகத்தின் தீய எண்ணம் கொண்ட சதியை மத்திய அரசு உணர்ந்து கொண்டு, அடுத்த சில நாட்களுக்குள் கர்நாடகம் அதன் பகுதிநேர உறுப்பினரை நியமிக்கா விட்டால், இருக்கும் உறுப்பினர்களைக் கொண்டு காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கு மோடி ஏன் நேரடியாக வருத்தம் தெரிவிக்கவில்லை? இதுதான் காரணமா?

சுப்பிரமணியன் சுவாமி மேலும் கூறுகையில், வீரன் போல் வசனம் பேசிய சீமான் காணாமல் போய்விட்டாா். அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. காவல் துறையினர் அவரை கைது செய்வர்... என்றார்.

நான் ஒரு சமூக விரோதி: கமல்ஹாசனின் ஒப்புதல் வாக்குமூலம்!

ரஜினி இதுவரையிலும் ஒரு தனிநபர்தான். அவர் சொல்லும் ஒவ்வொரு கருத்தும் தனிப்பட்ட வகையில் அவர் சொல்வது தான்! அப்படி இருக்கும் போது, ரஜினியின் கருத்தை தனிப்பட்ட கருத்து என்று, அடிப்படை அறிவுகூட இல்லாத நிலையில் கமல்ஹாசன் சொல்வது, அரைவேக்காட்டுத்தனமே அன்றி வேறல்ல என்று விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன.
- 2026

Recent articles