தூத்துக்குடி முன்னாள் ஆட்சியரிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

sterlite tuticorin - 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற போது, மாவட்ட ஆட்சியராக இருந்த வேங்கடேசனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தியது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் துப்பாக்கிச் சூடு நடத்தப் பட்டது. இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியாயினர். பலர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து தேசிய மனித உரிமை ஆணையக் குழு எஸ்பி பிரிட்டோ பிரசாத் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று 3வது நாளாக இக்குழுவினர் விசாரணை நடத்தினர். துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகக் கூறப்படும் தாசில்தார் சந்திரன், டெபுடி தாசில்தார்கள் சேகர், கண்ணன், துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், அன்றைய தினம் பொறுப்பில் இருந்த ஆட்சியர் வேங்கடேசன், போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த மனித உரிமை ஆணையக் குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி 4வது நாளாக இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வரும் ஆணையக் குழுவினர், அப்போதைய ஆட்சியராக இருந்த வேங்கடேசனிடம் விசாரணை நடத்தினர். மேலும், துணை வாட்டாட்சியர், போலீசார் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டின்போது மாவட்ட ஆட்சியர் எங்கிருந்தார், என்ன நடவடிக்கை எடுத்தார் என்பன உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories