காவிரியை வைத்தே ரஜினிக்கு ப்ளாக்மெயில்! ‘கன்னட’ திரையுலகினர் அடாவடி!

Published:

rajini kamal - 2026

கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்ட ரஜினி காந்தை, காவிரி பிரச்னையை  முன்வைத்தே, கன்னட திரையுலகினர் ப்ளாக்மெயில் செய்து, மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

கர்நாடகாவில் ‘காலா’ படத்தைத் திரையிட கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிக்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது. அதன்படி,  காவிரி தொடர்பாக இரு மாநில அரசுகள், விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினி கூற வேண்டும் என்று, கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் சாரா கோவிந்த், ரஜினிக்கு நிபந்தனை விதித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினி தெரிவிக்க வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார். அவ்வாறு ரஜினி கூறினார் என்றால், அவரது காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட உதவி செய்வதாக அவர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சி அலைகளை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசன் பெங்களூரு சென்று, காவிரி பிரச்னையில் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியதன் மர்மம் இப்போது விலகிவிட்டது. எத்தகைய அரசியல் பின்னணியில் கமல்ஹாசன் கர்நாடகத்துக்குச் சென்று, இவ்வாறு கூறியுள்ளார் என்பதை வைத்து, அரசியல் தளத்துக்கு வரும் முன்பேயே தமிழர்களுக்கு கமல்ஹாசன்  செய்துள்ளது பச்சைத் துரோக அரசியல்தான் என்பது, பளிச்சென தெரிந்துவிட்டது!

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img