நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவிக்கு இரங்கல் தெரிவித்த ரஜினி

Published:

rajini kanth - 2026

சென்னை: நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினி காந்த்.

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதற்காக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மேலும், காவிரி பிரச்னைக்காக கர்நாடகா முதல்வர் குமாரசாமியை நடிகர் கமல் சந்தித்து பேசியதில் தவறு ஒன்றும் இல்லை; இது ஆரோக்கியமான ஒன்று என்று குறிப்பிட்ட ரஜினி, காலா படம் கர்நாடகாவில் நிச்சயம் வெளியாகும் என நினைக்கிறேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்த நிலையில், தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீபா (18) நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 2016-2017ஆம் கல்வியாண்டில் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்த அவர், பொதுத்தேர்வில் 1,125 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் ஆனால் நீட் தேர்வில் 159 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தும், அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் நீட் தேர்வெழுத ஓராண்டாக தீவிர முயற்சி எடுத்துப் படித்து வந்தார். இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் வெறும் 39 மதிப்பெண்களே பெற்றிருந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார் பிரதீபா.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img