தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மீது முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு முழு நீள புகார்ப் பட்டியலை வாசித்து வருகிறார். அவரது புகார்ப் பட்டியல் இதுதான்…
- பத்து மணிக்கு கூட்டம் என்றால் 12 மணிக்கு தான் திருநாவுக்கரசர் வருவார்.
- திருநாவுக்கரசர் மைக்கை பிடித்தால் கீழே வைக்க மனம் வராது.
- எல்லா கூட்டத்திலும் அதிமுக , பாஜக பற்றியே பேசுகிறார்.
- பிற கட்சிகளின் முன்னாள் தலைவர்களை புகழ்வது தவறில்லை. ஆனால் ஜால்ரா அடிக்க கூடாது.
- கடைசியில் காங்கிரஸ் கட்சி பற்றி பேசுகிறார். யார் தான் கேட்பார்கள்.
- திருநாவுக்கரசருக்கு யாரும் நெருக்கடி தரவில்லை , காங்கிரஸ் என்ற எண்ணமே இல்லை.
- விரைவில் மாற்றம் வரும் , ராகுல் காந்தி நடவடிக்கை எடுப்பார்.
- காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் திருநாவுக்கரசருக்கு இல்லை.
- திருநாவுக்கரசரை நீக்க வேண்டுமென உண்மையான தொண்டர்கள் விரும்புகின்றனர்.
- திருநாவுக்கரசர் ஒரு இன்ச் கூட வேலை செய்யவில்லை.
- பலமாக இருக்கும் இயக்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் திருநாவுக்கரசரின் செயல்பாடுகள் உள்ளது.
– ஈவிகேஎஸ் இளங்கோவன்