புதுக்கோட்டை:
புவனேஸ்வரி கோவிலில் காசி விசுவநாதருக்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபட்டனர்!!
மஹா சிவராத்திரி விழா, அனைத்து சிவன்கோவில்கள் உட்பட பல்வேறு கோவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு பக்தர்கள் வழிட்டனர்.
இவ்வருடத்தில் ஸ்ரீ மஹா சிவராத்திரி பிரதோஷத்துடன் இருந்தது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை நகரிலுள்ள ஸ்ரீ ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்திலுள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதப் பெருமானுக்கு பக்தர்கள் எவ்வித வேறுபாடு இன்றி தங்களது கரங்களாலேயே நீரும், பாலும் ஊற்றி அபிஷேகம் செய்தனர். நள்ளிரவு வரை நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மஹா சிவராத்திரியினை முன்னிட்டு புவனேஸ்வரி அம்பாள் மற்றும் ஆலயத்திலுள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைப்பெறுகின்றது. புவனேஸ்வரி அம்பாள் மஞ்சள் காப்பு மலர் அளங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும் நகரிலுள்ள சாந்தநாத சுவாமி ஆலயம் மனோன்மணியம் கோவில் மற்றும் ஸ்ரீ பொற்பனை முனீஸ்வரர் மற்றும் மேலராஜ வீதியிலுள்ள காமாட்சியம்மன் திருவேங்கைவாசல் கோவில், அரிமளம் சத்திரம் காமாட்சியம்மன் உட்பட பல்வேறு ஆலயங்களில் மஹா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
\
செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை