ஆண்டாள் கோயிலில் ஆடிப் பூர விழாவுக்கான முகூர்த்தக்கால் நடல்!

srivilliputhur muhurthakkal ani swathi utsav - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடி பூரதேரோட்டம் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வெகு சிறப்பு பெற்றதாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக சிறப்பு வாய்ந்த இங்கு, ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று
ஆண்டாள் அவதரித்த நாளின் போது மிக பிரமாண்டமான தேரில் ஆண்டாளும் ரங்க மன்னரும் எழுந்தருள்வர்.

இந்தத் தேரினை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து நான்கு ரத வீதிகள் வழியே நிலைக்கு சேர்ப்பார்கள். இந்தத் திருவிழா விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே மிக குறிப்பிடத்தக்க விழாவாகவும் உள்ளது.

இந்த ஆண்டு ஆடிப்பூர தேர்த் திருவிழாவிற்கான முகூர்த்தக் கால் நடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

முன்னதாக ஆண்டாள் சந்நிதியில் விஸ்வரூப பூஜை முடிந்த பின்னர் புண்யாகவாசனம், ஸ்தம்ப ஆவாஹன பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் நடத்தி, அங்கிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு தேர் நிலைக்கு வந்து முகூர்த்தக்காலுக்கு பல்வேறு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க ஆவாஹணம் செய்யப்பட்டது.

ஆகம முறைப்படி பூஜைகளை கோவில் அர்ச்சகர் பாலாஜி பட்டர் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து முகூர்த்தக்கால் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் இரா.இலட்சுமணன், ஸ்தானிகர் ரங்கராஜன் என்ற ரமேஷ், மணியம் கோபி ஸ்ரீ ராமன், சுதர்சன், ஏழுர் நாயுடு மகாஜன சங்கத் தலைவர் வெங்கடேஷ் பெருமாள், சங்க செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் கோவில் செயல் அலுவலர் லட்சுமணன் கோவில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories