T20 WC 2024: அரையிறுதியில் அலேக் ஆக வென்ற இந்திய அணி!

t20 worldcup - 2026
#image_title

டி 20 உலகக் கோப்பை – அரையிறுதி ஆட்டங்கள் – 27.06.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

தென் ஆப்பிரிக்கா vs ஆஃப்கானிஸ்தான்

இந்த அரையிறுதிக்கு முன்னர் ஆஃப்கானிஸ்தான் மிகச் சிறப்பாக விளையாடி வருவதாலும், தென் ஆப்பிரிக்கா அணி ஆங்கிலத்தில் ச்சோக்கர்ஸ் என அழைக்கப்படுவதாலும் – அதாவது கடைசி நேரத்தில் சொதப்புவர்கள் என்பதாலும் ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதியில் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்திற்கு வந்து, இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை தோற்கடித்து, டி20 கோப்பையை வெல்லப்போவதாக கனவு கண்டு கொண்டிருந்ததாக சிலர் எழுதிவந்தனர். ஆனால் இன்று நடந்தது அதற்கு நேர்மாறானது.

ஒரு பிள்ளைப்பூச்சியை காலில் போட்டு நசுக்குவதுபோல தென் ஆப்பிரிக்க அணி ஆஃப்கானிஸ்தான் அணியைத் தோற்கடித்தது. டாஸ்வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. 11.5 ஓவரில் 56 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

அதிகபட்ச் ஸ்கோர் அஸ்மத்துல்லா உமர்சாய் (10 ரன்) உதிரி ரன்கள் அதைவிட அதிகம் (13 ரன்).  டி காக் ரோஹித் ஷர்மா போல அதிரடியாக ஆடக்கூடியவர் என்பதால் 3 ஓவர் அல்லது அதிகபட்சமாக 5 ஓவரில் மேட்ச் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் டி காக் இரண்டாவது ஓவர் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் ஹெண்ட்ரிக்ஸும் மர்க்ரமும் சற்று நிதானமாக ஆடி 8.5 ஓவரில் 60 ரன் எடுத்து அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர். 

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இந்தியா  vs இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்கா – ஆஃப்கானிஸ்தான் ஆட்டம் இந்திய நேரப்படி காலையில் நடந்தது என்றால் இந்தியா இங்கிலாந்து அணிகளின் ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது.  ஆனால் மழைக்கான முன்னறிவிப்பு இருந்தது. எனவே ஆட்டம் நடக்குமா? நடக்காதா என்ற பதட்டமும் இருந்தது. மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. ரோஹித் ஷர்மா சென்ற ஆட்டத்தைப் போலவே வெறியாட்டம் ஆடத் தயாராக இருந்தார். ஆனால் விராட் கோலி மீண்டும் ஒருமுறை குறைவான ஸ்கோரில் அட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ரிஷப் பந்தும் சொற்ப ரன்னுக்கு அவுட்டானார். பின்னர் ரோஹித் ஷர்மாவுடன் (39 பந்துகளில் 57 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) சூர்யகுமார் யாதவ் (36 பந்துகளில் 47 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஹார்திக் பாண்ட்யா (13 பந்துகளில் 23 ரன்), ஜதேஜா (9 பந்துகளில் 17 ரன்), அக்சர் படேல் (6 பந்துகளில் 10 ரன்) ஆகியோரின் ஆட்டத்தினால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 171 ரன் எடுத்தது. இங்கிலாந்து அணியின் கிரிஸ் ஜோர்டன் மூன்று விக்கட்டுகளை எடுத்தார்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

இரண்டாவதாக ஆடவந்த இங்கிலாந்து அணியின் ஆட்டத்தின்போது முதல் சேஞ்ச் பவுலராக களமிறங்கிய அக்சர் படேல் நாலாவது ஓவரில் பட்லரையும் (23 ரன்), ஆறாவது ஓவரில் ஜானி பெயர்ஸ்டோவையும் (பூஜ்யம் ரன்), எட்டாவது ஓவரில் மொயின் அலியையும் (8 ரன்) வீழ்த்தினார்.

இதற்கிடையில் பும்ரா, பில் சால்டை (5 ரன்) ஐந்தாவது ஓவரில் அவுட்டாக்கினார். இதற்கு அடுத்து பந்துவீச வந்த குல்தீப் யாதவ், ஹாரி ப்ரூக் (25 ரன்), சாம் கரன் (2 ரன்), கிரிஸ் ஜோர்டன் (1 ரன்) ஆகியோரை தனது பந்துவீச்சில் ஆட்டமிழக்கசெய்ததுடன், லியம் லிவிங்க்ஸ்டோன் ரன் அவுட் ஆகவும் காரணமாக இருந்தார்.

ஆட்டத்தின் எந்த நிலையிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறக்கூடிய நிலையில் இல்லை. 16.4 ஓவரில் 103 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 68 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது. 

இந்திய அணி ஜூன் 29 அன்று தென் ஆப்பிரிக்க அணியுடன் தனது இரண்டாவது முறை கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் விளையாடும்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

தென் ஆப்பிரிக்க அணி முதன் முறையாக டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆடுகிறது.

இரண்டு அணிகளும் இந்தப். போட்டியில் தாங்கள் ஆடிய அனைத்து ஆட்டங்களையும் வெற்றி பெற்றிருக்கின்றன. 

இந்திய அணி கோப்பையை வெல்ல வாழ்த்துவோம்.      

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories