January 25, 2025, 8:38 AM
23.2 C
Chennai

ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றதது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 10தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெற்று தினசரி வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்துதினசரி கலை
நிகழ்ச்சி நடந்தது.

16ஆம் நாள் திருவிழா தேரோட்டம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, அதிகாலை அம்மன் கேடயத்தில் அலங்காரமாகி கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்து சேர்ந்தது.
அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார் .

காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா, சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், துணைக் கண்காணிப்பாளர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, சப்இன்ஸ்பெக்டர் சேகர், கோவில் செயல் அலுவலர் இளமதி, ஆய்வாளர் ஜெயலட்சுமி, பேரூராட்சி செயல்அலுவலர் செல்வகுமார், தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்யபிரகாஷ், அர்ச்சகர் சண்முகவேல், ஆலய பணியாளர்கள் பூபதி ஆகியோர் வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தனர், இதில் தாசில்தார் மூர்த்தி, மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் ராஜேஷ், சோழவந்தான் பாட்டியமந்தார்,கிராம காவல்காரர்கள்ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுப்பதற்கு வெள்ளை வீசினார்கள்.

தேர், அங்கிருந்து புறப்பட்டு கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி, வழியாக தேர் வலம் வந்து புறப்பட்ட இடத்திற்கு தேர் வந்து சேர்ந்தது. தேர் வலம் வருவதற்கு ஆசாரியர்கள் தேர் சக்கரங்களை முறையாக
குடில் கட்டை போட்டு வழிநடத்தி வந்தனர்..

ALSO READ:  ரயிலில் அத்துமீறிய நபர்; விசாரணை கோரும் அ.பா.ம.க., தலைவர் ராமநாதன்!

வழிநெடுக அம்மனை வரவேற்று பூஜைகள் செய்தனர். இதில், முன்னாள் சேர்மன் எம் .கே. முருகேசன், வருவாய் ஆய்வாளர் ,சுகாதாரபணி ஆய்வாளர் சூரியகுமார், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, செந்தில்வேல், ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேர் வரும் வழி நெடுக மாம்பழம், வாழைப்பழம், நாணயங்கள் சூரை விட்டனர்,

சிறுவர் சிறுமியர் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வலம் வந்தனர். நீர்,மோர்,பானகம் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள். இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், முத்தையா,
முத்து உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.

மின்சார வாரிய உதவி இன்ஜினியர் ராஜேஷ் தலைமையில் பணியாளர்கள் தேர் செல்லும் இடங்களில் மின் வயர்களை கழற்றி மீண்டும் இணைப்பு கொடுத்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு, வட்டப் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் நண்பர்கள் சார்பாக 11வது ஆண்டாக அன்னதானம் வழங்கும் விழா நடந்தது.

இரவு கோவிலின் முன்பாக உள்ள மேடையில் காவல்
துறை பேண்டு வாத்திய இன்னிசை கச்சேரி நடைபெறும். சோழவந்தான் காவல் துறையை குடும்பத்தார்கள் சார்பாக தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காமாட்சிபுரம் சோழவந்தான் பூ வியாபாரிகள் சார்பாக தேர் முழுவதும் வண்ண பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர்.இன்று இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும்.

ALSO READ:  காசி தமிழ் சங்கமம் 3.0; நீங்களும் விண்ணப்பிக்கலாமே!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.