January 25, 2025, 8:17 AM
23.2 C
Chennai

சென்னை வழி வந்தே பாரத் ரயில்கள்; எகிறும் வெயிட்டிங் லிஸ்ட்! களமிறங்கும் கூடுதல் ரயில்கள்!

சென்னையில் இருந்து மைசூர், கோவை, விஜயவாடா, திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இயங்கும் புல்லட் ரயில்களுக்கு இணையாக இந்தியாவில் இயங்கும் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள் நாளுக்கு நாள் பயணிகளிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க முடியும்.

ஆனால் நமது நாட்டின் ரயில்வே தண்டவாளங்களின் அமைப்புகள் காரணமாக இதன் அதிகபட்ச வேகம் 130 கிலோ மீட்டர் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் மக்கள் தொகை அதிகம் உள்ள குறிப்பிட்ட முக்கியமான வழித்தடங்களில் தற்போது 55 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து கோவைக்கும், மைசூர், விஜயவாடா, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களிலும், மேலும் திருவனந்தபுரம் காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களிலும் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.

ALSO READ:  ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

தற்போது சென்னை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வரும் சிறப்பு வந்தே பாரத் ரயில் தினசரி ரயிலாக இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி துவக்கி வைக்க இருந்த நிலையில் அவரது பயணத்தில் மாற்றம் ஏற்பட்டதால் இந்த சேவை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் மதுரை பெங்களூர் இடையே ஒரு வந்தே பாரத் ரயிலும் விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நடப்பாண்டு கோடை காலத்தில் கடந்த ஏப்ரல் மே ஆகிய இரண்டு மாதங்களில் சென்னையிலிருந்து வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மூலம் 19 கோடியே 20 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயணிகளிடையே நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருவதை தெரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாக சென்னை சென்ட்ரல்-மைசூர் இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் வண்டி எண். 20607 ஏப்ரல் மாதத்தில் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் இருக்கும் 100 சதவீத இடங்களை தாண்டி டிக்கெட் முன்பதிவு 120.41 சதவீதத்தை கடந்து பதிவாகியிருந்தது . அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி 20.41% பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் தவிர மீதி தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தமிழகத்தின் தொன்மை வரலாறு அறியாத அநாகரீக துணை முதல்வர்!

மேலும் இந்த ரயிலில் நார்மல் சார் காரில் உள்ள இடங்களில் 122.64 சதவீதம் டிக்கெட்டுகள் முன்பதிவாக இருந்தது. மே மாதத்தை பொருத்தவரை எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் 135.24 சதவீதமும் சேர்க்காரி 130.4 சதவீதமும் டிக்கெட்டுகள் முன்பதிவாக இருந்தது.

சென்னை சென்ட்ரல் மைசூர் ரயில் மூலம் ஏப்ரல் மே மாதங்களில் ரூபாய் ஒரு கோடியே 69 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயும் வருமாருகத்தில் மைசூர் சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட ரயில் மூலம் ஏப்ரல் மே மாதங்களில் ரூபாய் ஒரு கோடியே 71 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், சென்னை கோவை இடையேய்க்கப்பட்ட ரயில் மூலம் ரூபாய் 92.75 லட்சமும், மறு மார்க்கத்தில் கோவை- சென்னை ரயில் மூலம் இரண்டு மாதங்களில் ரூபாய் 79. 04 லட்சம் ரூபாயும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதே போல சென்னை எழும்பூர் -நெல்லை மற்றும் சென்னை-மைசூர் இயக்கப்பட்டு வரும் மந்தை பாரத் ரயில்களும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

ALSO READ:  மதுரை கோயில்களில் சனி மகா பிரதோஷம்: திரண்ட பக்தர்கள்!

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியிருப்பதாவது,

“சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மூலமாக இரண்டு மாதங்களில் 19 கோடியே 20 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது தவிர சில வழித்தடங்களில் சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டது. அந்த ரயில்களுக்கும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பயணிகளின் தேவை அதிகமாக உள்ள முக்கிய வழித்தடங்களில் கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” – இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.