February 21, 2026, 7:24 PM
29 C
Chennai

சென்னை வழி வந்தே பாரத் ரயில்கள்; எகிறும் வெயிட்டிங் லிஸ்ட்! களமிறங்கும் கூடுதல் ரயில்கள்!

new vande bharat train color - 2026

சென்னையில் இருந்து மைசூர், கோவை, விஜயவாடா, திருநெல்வேலி உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இயங்கும் புல்லட் ரயில்களுக்கு இணையாக இந்தியாவில் இயங்கும் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள் நாளுக்கு நாள் பயணிகளிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ரயில்கள் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க முடியும்.

ஆனால் நமது நாட்டின் ரயில்வே தண்டவாளங்களின் அமைப்புகள் காரணமாக இதன் அதிகபட்ச வேகம் 130 கிலோ மீட்டர் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் மக்கள் தொகை அதிகம் உள்ள குறிப்பிட்ட முக்கியமான வழித்தடங்களில் தற்போது 55 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை தெற்கு ரயில்வே சார்பில் சென்னையில் இருந்து கோவைக்கும், மைசூர், விஜயவாடா, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களிலும், மேலும் திருவனந்தபுரம் காசர்கோடு உள்ளிட்ட வழித்தடங்களிலும் தற்போது வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது.

தற்போது சென்னை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வரும் சிறப்பு வந்தே பாரத் ரயில் தினசரி ரயிலாக இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி துவக்கி வைக்க இருந்த நிலையில் அவரது பயணத்தில் மாற்றம் ஏற்பட்டதால் இந்த சேவை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் மதுரை பெங்களூர் இடையே ஒரு வந்தே பாரத் ரயிலும் விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நடப்பாண்டு கோடை காலத்தில் கடந்த ஏப்ரல் மே ஆகிய இரண்டு மாதங்களில் சென்னையிலிருந்து வெவ்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மூலம் 19 கோடியே 20 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயணிகளிடையே நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருவதை தெரிந்து கொள்ள முடிகிறது.

குறிப்பாக சென்னை சென்ட்ரல்-மைசூர் இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் வண்டி எண். 20607 ஏப்ரல் மாதத்தில் எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் இருக்கும் 100 சதவீத இடங்களை தாண்டி டிக்கெட் முன்பதிவு 120.41 சதவீதத்தை கடந்து பதிவாகியிருந்தது . அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி 20.41% பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் தவிர மீதி தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயிலில் நார்மல் சார் காரில் உள்ள இடங்களில் 122.64 சதவீதம் டிக்கெட்டுகள் முன்பதிவாக இருந்தது. மே மாதத்தை பொருத்தவரை எக்ஸிக்யூட்டிவ் சேர் காரில் 135.24 சதவீதமும் சேர்க்காரி 130.4 சதவீதமும் டிக்கெட்டுகள் முன்பதிவாக இருந்தது.

சென்னை சென்ட்ரல் மைசூர் ரயில் மூலம் ஏப்ரல் மே மாதங்களில் ரூபாய் ஒரு கோடியே 69 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயும் வருமாருகத்தில் மைசூர் சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட ரயில் மூலம் ஏப்ரல் மே மாதங்களில் ரூபாய் ஒரு கோடியே 71 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், சென்னை கோவை இடையேய்க்கப்பட்ட ரயில் மூலம் ரூபாய் 92.75 லட்சமும், மறு மார்க்கத்தில் கோவை- சென்னை ரயில் மூலம் இரண்டு மாதங்களில் ரூபாய் 79. 04 லட்சம் ரூபாயும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதே போல சென்னை எழும்பூர் -நெல்லை மற்றும் சென்னை-மைசூர் இயக்கப்பட்டு வரும் மந்தை பாரத் ரயில்களும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியிருப்பதாவது,

“சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் மூலமாக இரண்டு மாதங்களில் 19 கோடியே 20 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது தவிர சில வழித்தடங்களில் சிறப்பு வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டது. அந்த ரயில்களுக்கும் பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பயணிகளின் தேவை அதிகமாக உள்ள முக்கிய வழித்தடங்களில் கூடுதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” – இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories