December 5, 2025, 1:07 PM
26.9 C
Chennai

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் தேர் வரும் பாதையில் ஆக்கிரமிப்பு காரணமாக தேர் வருவதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா கடந்த பத்தாம் தேதி கொடி
யேற்றத்துடன் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. சோழவந்தான் பெரிய கடை வீதியில் தொடங்கிய, தேர் பெரிய கடை வீதி தெற்கு ரத வீதி மேலரத வீதி வடக்கு ரத வீதி சின்ன கடை வீதி திரௌபதி அம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகள் வழியாக மறுபடியும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர வேண்டும் .

காலை 8:30 மணிக்கு தொடங்கும் தேரோட்ட நிகழ்ச்சியானது 11:30 மணி அளவில் தொடங்கிய இடத்திற்கு வந்து சேர்வது வழக்கம் ஆனால், சோழவந்தானில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக ரோட்டை மறித்து கடைகளை கட்டி இருப்பதாலும் சாலையின் நடுவில் கடைகள் இருப்பதாலும் தேர் வருவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

குறிப்பாக, சின்ன கடை வீதி எனும் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் நுழைந்த தேர் 20 நிமிடத்தில் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர வேண்டிய நிலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதமானது . குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் இருந்து தேரை இழுப்பதற்கு பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஒரு இடத்தில் இருந்து தேரை நகற்றுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலானதால், தேரோட்ட நிகழ்ச்சியை காண வந்த வெளியூர் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

பல இடங்களில் பொதுமக்கள் காத்திருந்து தேர் இப்போது வரும் அப்போது வரும் என ,எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர் .

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், சோழவந்தானில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளால் இட நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்திற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில், தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேர் வரும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக எடுத்து தேர் வருவதற்கு வழி ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும் அவ்வாறு செய்யாததால் 3 மணி நேரத்தில் நிலைக்கு வர வேண்டிய தேர் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் தேர் நிலைக்கு வராததால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories