செங்கோட்டை: தமிழக கேரள எல்லையான செங்கோட்டை – புளியரை கோட்டை வாசல் செல்லும் வழியில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பாதையில் தான் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது. கொல்லம் -தூத்துக்குடி பிரதான சாலை என்பதால், கனரக வாகனங்கள் அதிகம் செல்வதுண்டு. இந்நிலையில் சாலையில் ஏற்பட்டுள்ல மண்சரிவால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், விபத்து ஏற்படும் முன் பாரம் ஏற்றி கேரளா செல்லும் வாகனங்களை நிறுத்தி வைத்து உடனடியாக பராமரிப்புப் பணிகள் செய்யவேண்டும் என்றும் இங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.