ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில், லடாக்கில் இருந்து வரும் செய்தி இந்திய இராணுவத்தின் வலிமையை பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது. LAC மீது ஒரு முன்கூட்டிய தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம், லடாக்கில் பாங்காங் திசோ ஏரியின் தெற்குக் கரையில் ஓர் உச்சியை மீட்டுள்ளது.
இது இந்திய இராணுவத்திற்கு ஒரு சிறந்த கண்காணிப்பு ஏற்பாடுகளை வழங்கும். மட்டுமல்லாமல், அதே பகுதியில் சமீபத்தில் கட்டப்பட்ட சின்சே போஸ்ட்களில் ஆதிக்கம் செலுத்தவும் உதவும்.
செய்திகளின் படி, ஆகஸ்ட் 29-30 இரவு, இந்திய இராணுவத்தின் ஒரு சிறப்பு செயல்பாட்டு பிரிவு அமைதியாக நகர்ந்து சில நூறு மீட்டருக்குள் இருந்த சின்சே துருப்புக்களை எச்சரிக்காமல் அந்த இடத்தை மீட்டது. உண்மையில், இந்த நடவடிக்கை மிகவும் விரைவாக இருந்தது! சீன துருப்புக்கள் உறங்கிக் கொண்டிருந்தன! மறுநாள் காலை எழுந்து பார்த்த போது, இந்திய மூவர்ணக் கொடி அவர்களிடமிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலையின் மீது பறப்பதை அவர்கள் கண்டனர். .
இந்தியாவின் இரகசிய சிறப்பு எல்லைப் படை (எஸ்.எஃப்.எஃப்) தான் இந்த மகத்தான சாதனையைச் செய்தது! பாங்காங் திசோ தெற்கு கரையில் அமைந்துள்ள ரெகுன் & ஸ்பான்குர் அருகில் இந்தப் பகுதி அமைந்திருந்தது. இதன் மூலம், பாங்காங் திசோ முழு தெற்குக் கரைப்பகுதியில் சீன நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியும்~
இந்த வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்றுதான். முன்னர் முறைகேடாக ஆக்கிரமிக்கப் பட்டு, சீனாவால் உரிமை கோரப்பட்டுக் கொண்டு வந்த இடம், இப்போது இந்திய வசமாகிவிட்டது. இந்த சிகரத்தினைக் கைக்கொண்டதன் மூலம், துல்லியமான பீரங்கித் தாக்குதல்களால் எந்தவொரு சீன இயக்கத்தையும் துண்டிக்க இந்திய ராணுவத்தால் முடியும். இதன் பொருள், மோதல்களின் போது, சீன துருப்புகளை அவற்றின் ஆயுத, அத்தியாவசிய பொருள்கள் விநியோக மையங்களுடன் இணைக்கும் ஒரே சாலையை இந்திய இராணுவம் துண்டித்து விடக்கூடும் .
ராஜதந்திர மற்றும் ராணுவத் தளபதிகளின் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும், சீன இராணுவம் பின்வாங்க மறுத்துவிட்டதால், இந்திய இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது .
இந்திய துருப்புக்களின் இந்த விரைவான நடவடிக்கை சீனாவுக்கு எரிச்சலூட்டியுள்ளது! பி.எல்.ஏ – பீப்பிள் லிப்ரேஷன் ஆர்மி, இதற்காக இந்திய ராணுவம் ஆக்கிரமித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. அதன் வெஸ்டர்ன் தியேட்டர் கமாண்ட் இந்திய ராணுவத்தை, “பல நிலை பேச்சுவார்த்தைகளின்” போது எட்டிய ஒருமித்த கருத்தை மீறியதாக குற்றம் சாட்டியுள்ளது .
ஆனால், நீடித்த பேச்சுவார்த்தைகளால் குளிர்காலம் வரை இந்திய இராணுவத்தை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தாமதப்படுத்தவும், குளிர்காலத்தை எப்போதும்போல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதன் எல்லைகளின் நிலையை மாற்றவும் சீன இராணுவம் திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்திய இராணுவத்தின் இந்த விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை, இனி சீன இராணுவம் லே பகுதியில் குளிர்காலத்தை செலவிட திட்டமிட்டால், அவர்கள் இந்திய ராணுவத்தின் எளிய தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கை தற்போதைய இந்திய நிலைப்பாட்டை தெளிவாக உணர்த்தியுள்ளது. சீனாவின் எல்லைப்புற வடிவமைப்புகளுக்கு இந்தியா தலையசைக்காது என்பதை சீன ராணுவத்திற்கு போதுமான அளவில் நிரூபித்துள்ளது.