December 4, 2025, 8:57 PM
25.6 C
Chennai

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

narendra modi in parliament - 2025

மக்களவைத் தேர்தலுக்குப் பின், முதல் முறையாக இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. பிரதமர் மோடி உள்பட எம்.பி.,க்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பார்த்துஹரி மஹதப் பதவி ஏற்பு உறுதிமொழிகளைச் செய்து வைத்தார். முன்னதாக, தற்காலிக அவைத்தலைவராக பர்த்துஹரி மஹதப்க்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

நான், நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, இந்த மக்களவையினுடைய, உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், இறைவன் பெயரால் சபதமேற்கிறேன்.    அதாவது நான், விதிமுறைப்படி ஸ்தாபிக்கப்பட்ட, பாரதத்தின் அரசியல்சட்டத்தின்பால், மெய்யான சிரத்தை, மற்றும், அர்ப்பணிப்போடு இருப்பேன்.   நான், பாரதத்தின் இறையாண்மை, மற்றும் ஒருமைப்பாட்டைப், கேடுறாமல் பாதுகாப்பேன்.   மேலும், எந்தப் பதவியை, நான் ஏற்க இருக்கிறேனோ, அதற்குண்டான, கடமைகளை, சிரத்தையுடன் அவற்றை, முழுமையாக நிறைவேற்றுவேன்.  – என்று உறுதி மொழி உரைத்தார்.

18வது மக்களவைக்கு நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவில், பெரும்பான்மை பெற்ற தே.ஜ.கூ., சார்பாக, மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றார். புதிய அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டது. இன்று ஒரு பகுதி உறுப்பினர்கள் பதவி ஏற்ற நிலையில், நாளையும் உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர். நாளை மறுநாள், 18வது மக்களவையின் அவைத்தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்க உள்ளது. வரும் 27ம் தேதி, புதிய மக்களவையின் முதல் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடக்கும். இறுதியில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார். அடுத்த மாதம் 3ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும். தொடர்ந்து 22ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது.

3வது ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி!

18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் தொடங்கும் முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவை…

நாடாளுமன்ற அரசியலில் இந்நாள் பெருமைக்குரியது மட்டுமல்ல கொண்டாட்டத்திற்குரிய நாள். சுதந்திரத்திற்குப் பின் முதன்முறையாக புதிய நாடாளுமன்றத்தில், புதிய உறுப்பினர்களுடன் அவை கூடுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நாளில் புதிய எம்.பி.,க்கள் அனைவரையும் வரவேற்கிறேன், வாழ்த்து தெரிவிக்கிறேன். நாடாளுமன்றக் கூட்டம் சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும். சாதாரண மக்களுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்றும் கூட்டமாக இது இருக்கும். புதிய உத்வேகம், புதிய உற்சாகத்துடன் பணிகளைத் தொடங்க வேண்டிய பணி நம் முன் இருக்கிறது.

2047ல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் செயல்படுவோம். உலகின் பெரிய தேர்தல் பெருமைக்குரிய வகையில் நிறைவு பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையளிக்கும் விஷயம்.

60 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பை ஒரு தரப்புக்கு மக்கள் கொடுத்துள்ளனர். இது நாடாளுமன்றத்துக்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளிக்கிறது. ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை முக்கியம், நாட்டை வழிநடத்த ஒத்துழைப்பு முக்கியம். 140 கோடி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான உழைப்பை முழுமையாக தருவோம். கடமை, செயல்பாடு மற்றும் கருணையுடன் ஆட்சி நடைபெறும். அனைவரையும் ஒருங்கிணைத்து நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டும்.

அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்ட ஜூன் 25 இந்திய அரசியலில் ஒரு கருப்பு நாள். 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஜனநாயகத்தை காக்க நாம் முழுமையாக முயற்சிப்போம். 3வது முறை ஆட்சிக் காலத்தில் மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம். இரண்டு முறை அரசை வழிநடத்திய அனுபவம் எங்களுக்கு உள்ளது.

நிலையான ஆட்சியே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். நாட்டு மக்களுக்குப் பணியாற்ற எதிர்க்கட்சிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேசத்திற்கு ஒரு நல்ல மற்றும் பொறுப்பான எதிர்க்கட்சி தேவை. சாமானிய மக்களின் எதிர்பார்ப்பை எதிர்க்கட்சிகள் பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டில் இருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்க உறுதி ஏற்போம்.. என்று பேசினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

திருப்பரங்குன்றம்: வைரத் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சிறிய வைரத்தேரை...

Entertainment News

Popular Categories