வாட்டர் ஹீட்டர் கை வைத்து ஒன்றரை வயது குழந்தை மரணம்!

water-heater
water-heater

வாணியம்பாடி அருகே ‘வாட்டர் ஹீட்டரை’ தொட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை மின்சாரம் பாய்ந்து இன்று உயிரிழந்தது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (25). தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (22). இவர்களுக்கு அனன்யா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவித்ரா தன் மகளை அழைத்துக்கொண்டு வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றார்.

இன்று (செப். 1) காலை 9 மணியளவில் குழந்தை அனன்யாவை குளிக்க வைப்பதற்காக வீட்டில் இருந்த பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ‘வாட்டர் ஹீட்டர்’ கருவியை பொருத்தி தண்ணீரை சூடுபடுத்தினார்.
அந்த நேரத்தில் தெருக்குழாயில் தண்ணீர் வந்ததால் குழந்தை அனன்யாவை வீட்டில் விளையாட வைத்துவிட்டு பவித்ரா தண்ணீரை பிடிக்க தெருவுக்கு சென்றார்.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அனன்யா ‘வாட்டர் ஹீட்டரு’டன் இருந்த தண்ணீரில் கையை வைத்தது. அப்போது, குழந்தை மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பவித்ரா உட்பட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது, குழந்தை பேச்சு மூச்சின்றி மயங்கிய நிலையில் கிடந்தது. உடனே, குழந்தையை தூக்கிக்கொண்டு பவித்ரா வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மின்சாரம் தாக்கியதில் குழந்தை அனன்யா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைகேட்ட பவித்ரா அங்கேயே கதறி துடித்தார். இது குறித்து வந்த தகவலின் பேரில் வாணியம்பாடி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்பள்ளிப்பட்டு பகுதியில் மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories