February 23, 2026, 1:49 PM
29.4 C
Chennai

வாட்டர் ஹீட்டர் கை வைத்து ஒன்றரை வயது குழந்தை மரணம்!

water-heater
water-heater

வாணியம்பாடி அருகே ‘வாட்டர் ஹீட்டரை’ தொட்ட ஒன்றரை வயது பெண் குழந்தை மின்சாரம் பாய்ந்து இன்று உயிரிழந்தது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெட்டிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (25). தனியார் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பவித்ரா (22). இவர்களுக்கு அனன்யா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவித்ரா தன் மகளை அழைத்துக்கொண்டு வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றார்.

இன்று (செப். 1) காலை 9 மணியளவில் குழந்தை அனன்யாவை குளிக்க வைப்பதற்காக வீட்டில் இருந்த பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீரை நிரப்பி, அதில் ‘வாட்டர் ஹீட்டர்’ கருவியை பொருத்தி தண்ணீரை சூடுபடுத்தினார்.
அந்த நேரத்தில் தெருக்குழாயில் தண்ணீர் வந்ததால் குழந்தை அனன்யாவை வீட்டில் விளையாட வைத்துவிட்டு பவித்ரா தண்ணீரை பிடிக்க தெருவுக்கு சென்றார்.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை அனன்யா ‘வாட்டர் ஹீட்டரு’டன் இருந்த தண்ணீரில் கையை வைத்தது. அப்போது, குழந்தை மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பவித்ரா உட்பட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது, குழந்தை பேச்சு மூச்சின்றி மயங்கிய நிலையில் கிடந்தது. உடனே, குழந்தையை தூக்கிக்கொண்டு பவித்ரா வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மின்சாரம் தாக்கியதில் குழந்தை அனன்யா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதைகேட்ட பவித்ரா அங்கேயே கதறி துடித்தார். இது குறித்து வந்த தகவலின் பேரில் வாணியம்பாடி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்பள்ளிப்பட்டு பகுதியில் மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

Topics

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories