அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

aavin milk - 2026

“தமிழக பால்வளத்துறையும், ஆவின் நிர்வாகமும் அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.”தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த அதிமுக ஆட்சியில் 2014ம் ஆண்டு ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 10.00ரூபாய் உயர்த்தி அதிலிருந்து பால் உற்பத்தியாளர்களுக்கு 8.00ரூபாய் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டது.

அதன் பிறகு 2018ம் ஆண்டு ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6.00ரூபாய் உயர்த்தி அதிலிருந்து பால் உற்பத்தியாளர்களுக்கு 4.00ரூபாய் கொள்முதல் விலையாக உயர்த்தி வழங்கப்பட்டது.

2014, 2018ம் ஆண்டுகளில் இரண்டு முறை ஆவின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டதில் கிட்டத்தட்ட 80% விவசாய பெருமக்களான பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையாக உயர்த்தி வழங்கி 20% ஆவினுடைய நிர்வாக செலவினங்களுக்காக வழங்கியதில் ஒரு நியாயம் இருந்தது.

கொள்முதல் விலை உயர்வு அடிப்படையில் விற்பனை விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத, காலத்தின் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தற்போது ஆவின் நிறைகொழுப்பு பாலுக்கு (ஆரஞ்சு 48.00ல் இருந்து 60.00ரூபாய் மற்றும் டீமேட் 52.00ல் இருந்து 68.00ரூபாய்) லிட்டருக்கு சுமார் 12.000ரூபாய் முதல் 16.00ரூபாய் வரையிலும், ஆவின் கோல்டு (47.00ல் இருந்து 56.00) பாலுக்கு லிட்டருக்கு 9.00ரூபாய் வரையிலும் விற்பனை விலையை உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் பாரத்தை சுமத்தி விட்டு அதிலிருந்து வெறும் 3.00ரூபாய் மட்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையாக உயர்த்தி வழங்குவது என்பது எந்தவகையிலும் நியாயமில்லை. 

ஏனெனில் இது கடந்த ஆட்சியில் நடைபெற்ற விற்பனை விலை உயர்வு மற்றும் கொள்முதல் விலை உயர்வோடு ஒப்பிடுகையில் தற்போது உயர்த்தப்பட்ட விற்பனை விலையில் 20%முதல் 25% வரை மட்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி விட்டு 75%முதல் 80%வரை ஆவின் நிர்வாகத்திற்கு வழங்கியிருப்பதன் மூலம் பால்வளத்துறையும், தமிழக அரசும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலையை (விலை உயர்வு) மக்களிடம் இருந்தும், பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை ஆவினின் லாபத்தில் இருந்தும் வாங்கித் தர மூன்றாண்டுகளை கடந்தும் ஆட்சியாளர்களுக்கு மனமில்லாதததும், ஆவினை வெறும் வாக்கு வங்கி அரசியலாக பார்ப்பதுமே அதன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

குஜராத் (அமுல்), கர்நாடகா (நந்தினி), ஆந்திரா (விஜயா), கேரளா (மில்மா) உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் கூட்டுறவு பால் நிறுவனங்களின் செயல்பாடுகளை பார்த்து தமிழக பால்வளத்துறையும், ஆவின் நிர்வாகமும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்… என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories