February 13, 2025, 11:30 AM
25.6 C
Chennai

அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

“தமிழக பால்வளத்துறையும், ஆவின் நிர்வாகமும் அண்டை மாநில கூட்டுறவு பால் நிறுவனங்களை பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.”தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த அதிமுக ஆட்சியில் 2014ம் ஆண்டு ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 10.00ரூபாய் உயர்த்தி அதிலிருந்து பால் உற்பத்தியாளர்களுக்கு 8.00ரூபாய் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டது.

அதன் பிறகு 2018ம் ஆண்டு ஆவின் பால் விற்பனை விலை லிட்டருக்கு 6.00ரூபாய் உயர்த்தி அதிலிருந்து பால் உற்பத்தியாளர்களுக்கு 4.00ரூபாய் கொள்முதல் விலையாக உயர்த்தி வழங்கப்பட்டது.

2014, 2018ம் ஆண்டுகளில் இரண்டு முறை ஆவின் பால் விற்பனை விலை உயர்த்தப்பட்டதில் கிட்டத்தட்ட 80% விவசாய பெருமக்களான பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையாக உயர்த்தி வழங்கி 20% ஆவினுடைய நிர்வாக செலவினங்களுக்காக வழங்கியதில் ஒரு நியாயம் இருந்தது.

கொள்முதல் விலை உயர்வு அடிப்படையில் விற்பனை விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாத, காலத்தின் கட்டாயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தற்போது ஆவின் நிறைகொழுப்பு பாலுக்கு (ஆரஞ்சு 48.00ல் இருந்து 60.00ரூபாய் மற்றும் டீமேட் 52.00ல் இருந்து 68.00ரூபாய்) லிட்டருக்கு சுமார் 12.000ரூபாய் முதல் 16.00ரூபாய் வரையிலும், ஆவின் கோல்டு (47.00ல் இருந்து 56.00) பாலுக்கு லிட்டருக்கு 9.00ரூபாய் வரையிலும் விற்பனை விலையை உயர்த்தி பொதுமக்கள் தலையில் மிகப்பெரிய அளவில் பாரத்தை சுமத்தி விட்டு அதிலிருந்து வெறும் 3.00ரூபாய் மட்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையாக உயர்த்தி வழங்குவது என்பது எந்தவகையிலும் நியாயமில்லை. 

ஏனெனில் இது கடந்த ஆட்சியில் நடைபெற்ற விற்பனை விலை உயர்வு மற்றும் கொள்முதல் விலை உயர்வோடு ஒப்பிடுகையில் தற்போது உயர்த்தப்பட்ட விற்பனை விலையில் 20%முதல் 25% வரை மட்டும் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி விட்டு 75%முதல் 80%வரை ஆவின் நிர்வாகத்திற்கு வழங்கியிருப்பதன் மூலம் பால்வளத்துறையும், தமிழக அரசும் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளதை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலையை (விலை உயர்வு) மக்களிடம் இருந்தும், பால் விற்பனைக்கான கமிஷன் தொகையை ஆவினின் லாபத்தில் இருந்தும் வாங்கித் தர மூன்றாண்டுகளை கடந்தும் ஆட்சியாளர்களுக்கு மனமில்லாதததும், ஆவினை வெறும் வாக்கு வங்கி அரசியலாக பார்ப்பதுமே அதன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

குஜராத் (அமுல்), கர்நாடகா (நந்தினி), ஆந்திரா (விஜயா), கேரளா (மில்மா) உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் கூட்டுறவு பால் நிறுவனங்களின் செயல்பாடுகளை பார்த்து தமிழக பால்வளத்துறையும், ஆவின் நிர்வாகமும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்… என்று வலியுறுத்தியுள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories