சென்னை

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிறது புயல்..!

மத்திய அந்தமான் கடல் பகுதியில் அடுத்த மூன்று நாட்களில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

துரத்தும் போலீஸ்… முன்ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் மனு தாக்கல்!

இதனிடையே, பல இடங்களில் அதிமுக.,வினர் கொடுத்த புகார்கள் போலீசில் பதிவு செய்யப் பட்டு வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்பட்டது. நள்ளிரவில் முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் விரைவதாகவும் செய்திகள் பரவின.

திருத்தணி அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து: பல கோடி மதிப்பு பொருள்கள் நாசம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தனியார் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது!

அதிமுக.,வினர் போராட்டம்; பணிந்தது படக் குழு! சர்காரின் சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்படும்!

சேனல் ஒன்றுக்கு திருப்பூர் சுப்ரமணியன் அளித்த பேட்டியில், அதிமுகவினர் மாநிலம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து படத் தயாரிப்பாளர் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

சபரிமலை பாதுகாப்பு ரத யாத்திரை; கேரளம் மாதூரில் தொடங்கி வைத்தார் எடியூரப்பா!

சபரிமலை ஆசாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நடைபெறும் இந்த ரத யாத்திரை, வரும் 13ஆம்தேதி சபரிமலை சென்றடைகிறது.

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: ஜெயலலிதா இல்லாததால குளிர்விட்டுப் போயிடுச்சு…!

ஜெயலலிதா இல்லாததால், பலருக்கும் குளிர்விட்டுப் போய்விட்டது! சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதுபோல, சர்கார் திரைப்படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார் ஜெயக்குமார்!
- 2026

‘விஜய்’யின் சர்கார் செய்திகள்: விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை- அமைச்சர் சி.வி.சண்முகம்!

விஜய் நடித்துள்ள சர்க்கார் திரைப்படத்தில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப் பட்டுள்ளது அரசை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ள தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மீதும் அதில் நடித்துள்ள விஜய் மீதும் திரையிட்ட திரை அரங்குகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது செய்தியாளர்கள் சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் குறித்து கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர், சர்கார் திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர், நடிகர் விஜய் மற்றும் திரையிட்ட திரைஅரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், சர்கார் திரைப்படத்தில் அரசு வழங்கிய விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது மக்களை வன்முறைக்கு தூண்டும் செயல் என்றார்.

சாணி தட்டவா தூண்களை வைத்து மண்டபம் கட்டினார்கள்? என்ன கொடுமை இது!

காரணம் மண்டபம் நேர் எதில் பள்ளி கட்ட இடம் கேட்டு சபை கட்டிய மதமாற்ற கிறிஸ்து சபை ஒன்று உள்ளது. நமது அடையாள அழிப்பு மெல்ல அல்ல, அதிவேகமாக தொடங்கி விட்டது,

‘படித்ததில் பிடித்தது’ன்னாலே… அது திருடுறதுதானே! ஹெச்.ராஜா அதோட நிறுத்தியிருக்கலாம்!

பேசாம அமைதியா இருங்க சார்... அனேகமா இன்னும் ரெண்டு நாள்ல படம் மண்ணுக்குள்ள போயிடும்! பப்ளிசிட்டி கொடுத்து ஓடவச்சிடாதிங்க

தீபாவளி -டாஸ்மாக் கடைகளில் 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு மது விற்பனை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களில் மட்டும் 602 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளது.தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் குடிபிரியர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் அதிக...

திருமண் கிராமத்தை திருச்சபை கிராமமாக மாற்ற சதி! முளையிலேயே கிள்ளி எறிய களத்தில் தொண்டர்கள்!

கிறிஸ்தவ மதமாற்றம் தடுப்பது, இந்து சமயம் காப்பது என்கின்ற தர்மப்படி இறைவன் அருளோடு செய்யக்கூடிய அருளாளர்கள் அனைவரும் இந்த பணியில் இணைந்து வாருங்கள் . மேலும் கிறிஸ்தவ மதமாற்றத்தால் பாரத நாட்டிற்கு ஆபத்து அதோடு கூட இந்த திருமண் கிராமத்திற்கும் ஆபத்து

நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 625 பேர் மீது வழக்கு!

தமிழகத்திலேயே முதல் முறையாக, நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக, நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவியில், 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக பட்சமாக விழுப்புரத்தில் 225 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
- 2026

Recent articles