சர்காருக்கு எதிராக அதிமுக., 2வது நாளாக போராட்டம்..! பல இடங்களில் சர்கார் காட்சிகள் ரத்து! தொண்டர்கள் ரசிகர்கள் மோதல்!

sddefault 11 - 2026

அதிமுக.,வினர் 2வது நாளாக தொடர்ந்து இன்றும் சர்கார் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், சர்கார் படத்தின் காலை காட்சிகள் பல்வேறு நகரங்களில் ரத்து செய்யப்பட்டன. சில இடங்களில் மதியம், மாலைக் காட்சிகளும் ரத்தாகின. திருத்தங்கள் செய்யப் பட்டு, பிறகே படம் ஓடும் நிலை சில இடங்களில் ஏற்பட்டுள்ளது.

தஞ்சையில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள சாந்தி திரையரங்கு முன்பு அதிமுக.,வினர் காலையிலேயே திரண்டனர். ஜெயலலிதா பெயரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள், அரசின் இலவச பொருட்களுக்கு எதிரான காட்சிகளை நீக்கும் வரை சர்கார் படத்தை திரையிடக்கூடாது என முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து காலை காட்சியை ரத்து செய்வதாக சாந்தி திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. இதேபோல் தஞ்சையில் ஜூபிடர் திரையரங்கிலும் சர்கார் காலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் கார்த்திகேயன் மற்றும் பாபு திரையரங்கத்தில் இதே போல் பிரச்னை நீடித்தது. சேலத்தில் ஏ.ஆர்.ஆர் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயின் பேனர்களை கிழித்து எறிந்தனர். திரையரங்க அலுவலத்திற்குள் நுழைந்து படத்தை திரையிடுவதை நிறுத்துமாறு கோரினர். மேலும், அடுத்த காட்சிக்கு டிக்கெட் கொடுப்பதையும் தடுக்கும் வகையில், டிக்கெட் கௌன்ட்டர் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதை அடுத்து, சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே அடுத்த காட்சி திரையிடப்படும் என்று திரையரங்கு சார்பில் தெரிவிக்கப் பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சத்யா திரையரங்கிலும், எஸ்.வி.ராம் திரையரங்கிலும் இதே போல் போராட்டம் நடைபெற்றது. எஸ்வி ராம் திரையரங்கினுள் நுழைந்த சிலர் காட்சியை நிறுத்தியதோடு திரையரங்க மேலாளரையும் தாக்கினர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் விஜயா, கோமதி திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories