சர்காருக்கு எதிராக அதிமுக., 2வது நாளாக போராட்டம்..! பல இடங்களில் சர்கார் காட்சிகள் ரத்து! தொண்டர்கள் ரசிகர்கள் மோதல்!

sddefault 11 - 2026

அதிமுக.,வினர் 2வது நாளாக தொடர்ந்து இன்றும் சர்கார் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், சர்கார் படத்தின் காலை காட்சிகள் பல்வேறு நகரங்களில் ரத்து செய்யப்பட்டன. சில இடங்களில் மதியம், மாலைக் காட்சிகளும் ரத்தாகின. திருத்தங்கள் செய்யப் பட்டு, பிறகே படம் ஓடும் நிலை சில இடங்களில் ஏற்பட்டுள்ளது.

தஞ்சையில் சர்கார் படம் திரையிடப்பட்டுள்ள சாந்தி திரையரங்கு முன்பு அதிமுக.,வினர் காலையிலேயே திரண்டனர். ஜெயலலிதா பெயரை இழிவுபடுத்தும் வகையிலான காட்சிகள், அரசின் இலவச பொருட்களுக்கு எதிரான காட்சிகளை நீக்கும் வரை சர்கார் படத்தை திரையிடக்கூடாது என முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து காலை காட்சியை ரத்து செய்வதாக சாந்தி திரையரங்க நிர்வாகம் அறிவித்தது. இதேபோல் தஞ்சையில் ஜூபிடர் திரையரங்கிலும் சர்கார் காலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் கார்த்திகேயன் மற்றும் பாபு திரையரங்கத்தில் இதே போல் பிரச்னை நீடித்தது. சேலத்தில் ஏ.ஆர்.ஆர் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த நடிகர் விஜயின் பேனர்களை கிழித்து எறிந்தனர். திரையரங்க அலுவலத்திற்குள் நுழைந்து படத்தை திரையிடுவதை நிறுத்துமாறு கோரினர். மேலும், அடுத்த காட்சிக்கு டிக்கெட் கொடுப்பதையும் தடுக்கும் வகையில், டிக்கெட் கௌன்ட்டர் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதை அடுத்து, சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே அடுத்த காட்சி திரையிடப்படும் என்று திரையரங்கு சார்பில் தெரிவிக்கப் பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சத்யா திரையரங்கிலும், எஸ்.வி.ராம் திரையரங்கிலும் இதே போல் போராட்டம் நடைபெற்றது. எஸ்வி ராம் திரையரங்கினுள் நுழைந்த சிலர் காட்சியை நிறுத்தியதோடு திரையரங்க மேலாளரையும் தாக்கினர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் விஜயா, கோமதி திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories