விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் கருத்து!

Published:

Premalatha Vijayakanth - 2026

சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று கூறியுள்ள பிரேமலதா விஜயகாந்த், தற்போது நடக்கும் நிகழ்வுகள் வேதனை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்து வெளியான படம் சர்கார். அதில் தமிழக அரசின் இலவச திட்டங்களைக் குறை கூறி, இலவசப் பொருள்களை எரித்து வசனம் அமைக்கப் பட்டிருக்கிறது என்றும், ஜெயலலிதாவின் பெயரை தவறான கதாபாத்திரத்துக்கு உள்நோக்கத்துடன் பயன்படுத்தியிருப்பதாகவும் பிரச்னை எழுந்தது. ஆளும் அதிமுக.,வினரின் போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், பணிந்துள்ளது விஜயின் சர்கார் தயாரிப்பு நிறுவனம்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேமுதிக., தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்,  ஒரு படம் தணிக்கை செய்யப்பட்டு வெளியான நிலையில் சில காட்சிகளை நீக்க கோருவது வேதனை என்று கூறியுள்ளார்.

மேலும், சென்சார் செய்யப்பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img