சத்தீஸ்கர் மாநிலம், பலோடாபஜார் மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இரு சிறுமிகளை எட்டு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால் கொலை நடக்கும் என அக்கும்பல் மிரட்டியதால் உயிர் பயத்தில் சிறுமிகள் யாரிடமும் கூறவில்லை.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர், பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை வெளியிடுவேன் என்று ஒருவர் தன்னை மிரட்டுவதாக காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் தான் 2 சிறுமிகளுக்கும் நடந்த கொடூரம் இப்போது வெளியேவந்துள்ளது. சிறுமி அளித்த புகாரில், இந்தச் சம்பவம் மே 31 ஆம் தேதி நடந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னை எட்டுபேர் சேர்ந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தாகக் கூறியுள்ளார்.
மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் நபர், தன்னிடம் அந்த வீடியோ இருப்பதாகவும் அதை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியதாகவும் அந்தச் சிறுமி தெரிவித்தார்.
இது குறித்து தெரிவித்துள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இந்திர கல்யாண் சம்பவம் நடந்த அன்று பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளிடமும் விசாரணை நடத்தினார். அப்போது இக்கொடூரத்திற்கு ஆளான இருவரும் சகோதரிகள் என்பது தெரியவந்தது.
சம்பவத்தன்று இருவரும் இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சென்றுள்ளனர். பின்னர் வீடு திரும்பும் வழியில் எட்டு பேர் கும்பல் அவர்களை வழிமறித்து மிரட்டியுள்ளனர். அதில் நண்பர்கள் இருவரும் பயந்துவிட, பின்னர் அந்தக் கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 3 சிறுவர்கள் உள்பட எட்டுபேர் குற்றவாளிகளாக அறியப்பட்டு, அவர்கள்மீது போக்சோ சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறுமிகள் இருவரும் மைனர் என்பதால் அவர்களுடைய நண்பர்கள் மீது கடத்தல்வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளா