சண்டிகார்: ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரம் அருகே – ஷாக்பாத் டவுனில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பைலட் கீழே குதித்து உயிர் தப்பினார். இது குறித்து போலீசார் கூறுகையில் “விமானப்படை விமானம் வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. முதல் கட்டத் தகவல்படி, விமானம் வயல்வெளியில் விழுவதற்கு முன்பாக பைலட் கவசத்துடன் குதித்து உயிர் தப்பினார். இருப்பினும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விமானி மதியம் அம்பாலா விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டார். விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்று விமானியை காப்பாற்றி விமானப்படைத் தளத்திற்கு கொண்டு வந்தனர்.
To Read this news article in other Bharathiya Languages
குருக்ஷேத்ரம் அருகே விமானப் படை விமானம் விபத்து
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari