காங்கிரசில் உருவாகியுள்ளது பிரியங்கா சேனா! இதில் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள்! இவர்களுக்கு பிங்க் சீருடை அளிக்கப்பட்டுள்ளது!
பிரியங்கா சேனாவில் உள்ள இவர்கள் பிரியங்கா வத்ராவின் லக்னோ பேரணியின் போது உடன் செல்வார்கள்! அதுவும் பிங்க் நிற சீருடையை அணிந்தபடி!
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிறுத்துவோம் என்ற வாசகங்களை தாங்கிய பிங்க் வண்ண சீருடைகளை இவர்கள் அணிந்திருக்கிறார்கள்! இந்திரா காந்தி வானர் சேனாவை உருவாக்கினார். பிரியங்கா இப்போது பிங்க் சேனாவை உருவாக்கியிருக்கிறார் என்கிறார்கள்.
இந்த பிங்க் சேனையில் காங்கிரஸ் தொண்டர்கள் சுமார் 500 பேர் வரை பிங்க் நிற டீசர்ட் அணிந்திருக்கின்றனர். இதில், செண்ட்மெண்ட் நிறைந்த வாசகங்கள் அச்சிடப் பட்டுள்ளன.