January 25, 2025, 2:54 PM
28.7 C
Chennai

மோடியின் பயணத்தின் போது ரணில் இப்படி பேசியிருக்கக் கூடாது: கருணாநிதி

karunanidhi சென்னை: இலங்கைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்தால் சுடுவது தவறாகாது என்று, மோடி நல்லெண்ணப் பயணமாக இலங்கை செல்லவுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கக்கூடாது என்று  திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், இலங்கைக் கடற்படையினர் சில சமயங்களில் அப்பாவித் தமிழக மீனவர்களைச் சுட்டுள்ளனர். இலங்கைப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் ஏன் மீன்பிடிக்க வருகின்றனர்? ஒருவர் என் வீட்டில் கொள்ளை அடிக்க முயன்றால் நான் அவரைச் சுடலாம். சட்டம் அதை அனுமதிக்கிறது என்று ரணில் கூறியுள்ளார். மீனவர்கள் தங்கள் வாழ்வைத் தொடர மீன்பிடிக்க வருவதை, வீட்டில் கொள்ளை அடிக்க முயலுவதாக ரணில் ஒப்பிட்டுள்ளார். கடலில் மீன்பிடித்தால், அதற்காகச் சுடலாம் என்பது நீதியா? கச்சத்தீவை விட்டுத் தரமாட்டோம் என்றும் ரணில் கூறியுள்ளார். கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்கக் கூடாது என்று அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியிடம் நான் வலியுறுத்தினேன். மேலும், கச்சச்தீவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளேன். பிரதமர் நரேந்திரமோடி நல்லெண்ணப் பயணமாக இலங்கைக்குச் செல்லப் போகும் நேரத்தில் ரணில் இப்படி பேட்டி கொடுத்திருப்பது சரியில்லை. கண்டனத்துக்கு உரியதாகும். எனினும், இலங்கைத் தமிழர்களின் எதிர்கால நலனுக்காக தமது பயணத்தை நரேந்திர மோடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 13-ஆவது சட்டத் திருத்தத்தைப் பற்றி மட்டும் பேசாமல், வடக்கு கிழக்கு மாநிலங்களில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுவது, பறிக்கப்பட்ட நிலங்களைத் தமிழர்களிடமே திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பது, வடக்கு மாகாணக் கவுன்சிலுக்கு காவல் துறை, நில நிர்வாகம் உள்ளிட்டவை வழங்குவது தொடர்பாகவும் மோடி பேச வேண்டும். இதை மோடி நிறைவேற்றுவார் என நம்புவதாக கருணாநிதி கூறியுள்ளார்.

ALSO READ:  மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.