உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று ஹாமில்டன் நகரில் நடைபெறும் 34வது லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில், அயர்லாந்து டாஸ் வென்று, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணியின் துவக்க வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 89ரன்கள் சேர்த்தனர். அணியின் துவக்க வீரர் போட்டர்ஃபீல்ட் 67 ரன் எடுத்தார். ஸ்டிர்லிங் 42 ரன் எடுத்தார்.. ஜோஸ் 2 ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், ஓ பிரைன் நன்றாக விளையாடினார். 75 பந்துகளில் 75 ரன் எடுத்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். பால்ப்ரின் 24 ரன் எடுத்தார். ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனையை அஸ்வின் ஏற்படுத்தினார். அவர் 2 முக்கிய விக்கெட் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன் எடுத்தது.
To Read this news article in other Bharathiya Languages
உலகக் கோப்பை : இந்தியாவுக்கு 260 ரன் வெற்றி இலக்கு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari