புது தில்லி: நிலம் கையகப் படுத்தும் மசோதாவுக்கு எதிராக சமூக சேவகர் அன்னா ஹசாரே, மகாராஷ்டிரத்தின் சேவாகிராமில் இருந்து தில்லி வரையிலான பாதயாத்திரையை வரும் மார்ச் 25ஆம் தேதி தொடங்குகிறார். சேவாகிராம் மாகாத்மா காந்தி ஆசிரமம் அருகே உள்ள பயணியர் மாளிகையில் இது தொடர்பாக தன் உதவியாளர்களுடன் ஆலோசனை நடத்திய அவர், செய்தியாளர்களிடம் பேசியபோது, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவிற்கு எதிரான பாதயாத்திரை, மார்ச் 25ல் சேவாகிராமில் இருந்து துவங்கும். ஏப்ரல் 27ஆம் தேதி தில்லியில் நிறைவடையும். தில்லி ராம்லீலா மைதானத்தில் நிறைவடையும் பாதயாத்திரையின் பொதுக்கூட்ட மேடையில் அரசியல் தலைவர்களுக்கு அனுமதி கிடையாது. பாதயாத்திரை மேற்கொள்ளப்படும்போது அதில் வன்முறைக்கு இடம் கிடையாது. வன்முறை நிகழ்ந்தால் பாதயாத்திரை அப்போதே நிறுத்தப்படும்… என்றார்.
To Read this news article in other Bharathiya Languages
என் பாதயாத்திரையில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை: அன்னா ஹசாரே
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari