சென்னை: ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதேபோல், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 6 % அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் 107% ஆக இருந்த அகவிலைப்படியை 113% ஆக 2015 ஜன., 1ஆம் தேதி முதல் ரொக்கமாக வழங்க அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு, அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும் உள்ளாட்சி மன்றக் கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிகளின் ஏனைய ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என நிதித்துறை முதன்மை செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
To Read this news article in other Bharathiya Languages
ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 6% உயர்வு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari