சென்னையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நேற்று முன்தினம் அரசியல் கட்சி ஒன்றின் பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு சென்னை ஐகோர்ட் கடுமையான கண்டனம் தெரிவித்தது
இதன் காரணமாக புதுச்சேரி முதல்வர் பேனர் வைக்க தடை விதித்தார். அதே போல் திமுக தலைவர் முக ஸ்டாலின் இனிமேல் தன்னுடைய கட்சி தொண்டர்கள் யாரும் பேனர்கள் போஸ்டர்கள் வைக்க வேண்டாம் என்றும், அவ்வாறு பேனர்கள் வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பேனர்கள் வைக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்
இதனை அடுத்து இன்று பெரம்பூர் ரயில்வே கல்யாண மண்டபம் முன்பு திமுகவினர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று பேனர்கள் வைத்துள்ளனர். நேற்று மு க ஸ்டாலின் அவர்களும், இன்று உதயநிதி ஸ்டாலினும் பேனர் குறித்த அறிக்கை விட்டிருந்தனர்.
நேற்று விடுத்த அறிக்கையின் படி திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பேனர்கள் வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பாரா? நிகழ்ச்சியை புறக்கணிப்பாரா?
நான் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தியபடி திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பேனர்கள், கட்-அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது.
— M.K.Stalin (@mkstalin) September 13, 2019
இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். pic.twitter.com/ATxmOA0oBe
‘இந்த பேனர் கலாச்சாரம் ஒழிய வேண்டும்’-சுபஸ்ரீயின் தந்தை தெரிவித்த இந்தக் கருத்துக்களே நமக்கான பாடம். விதம்விதமாக பேனர் வைப்பது, சால்வை அணிவித்து பட்டங்கள் சொல்லி முழங்குவது, பட்டாசுகளை கொளுத்திப்போடுவது… இவை எதுவும் நமக்கிடையேயான அன்பை-பிணைப்பை அதிகரிக்கப்போவதில்லை. #BANBANNERS pic.twitter.com/WQPWhpQbKA
— Udhay (@Udhaystalin) September 13, 2019